தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக கொடியுடன் கள்ளழகரை வைத்து எடப்பாடிக்கு தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு: ஆன்மிக ஆர்வலர்கள், மக்கள் கடும் கண்டனம்

மதுரை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி, தமிழகம் முழுவதும் பிரசார பயணம் மேற்கொண்டு வருகிறார். மதுரை மாவட்டத்தில் 3வது நாளாக நேற்று பிரசாரத்தில் ஈடுபட்டார். நேற்று மாலை மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பழங்காநத்தம் பகுதியில் நடந்த கூட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி பேசும்போது, ‘‘நம்ம ஆட்கள் யாரும் டாஸ்மாக்கிற்கு போக மாட்டோம் என நம்புறேன்’’ என கூறியபோது, கூட்டத்தில் இருந்த அனைவரும் சிரித்தனர். தொடர்ந்து பேசிய அவர், ‘‘தீபாவளிக்கு தாய்மார்களுக்கு சேலை வழங்கப்படும்’’ என்றார்.

Advertisement

இதைத் தொடர்ந்து மத்திய தொகுதிக்கு உட்பட்ட டிஎம் ேகார்ட் சந்திப்பு பகுதியிலும், மதுரை தெற்கு தொகுதிக்கு உட்பட்ட ஓபுளாபடித்துறை பகுதியிலும் பேசினார். ஓபுளாபடித்துறை பகுதிக்கு வந்த எடப்பாடிக்கு, மதுரை கள்ளழகர் சித்திரை திருவிழாவின் போது நடப்பதைப் போல கள்ளழகர் குதிரையில் வருவதைப் போன்ற மாதிரியை அதிமுக கொடியுடன் கொண்டு வந்து வரவேற்றனர். மேலும், ஆற்றில் இறங்கிய கள்ளழகருக்கு தண்ணீர் பீய்ச்சுவதைப் போலவும் எடப்பாடி வந்த வாகனத்தின் மீது சிலர் தண்ணீர் பீய்ச்சி வரவேற்பு அளித்தனர்.

அதேபோல், கள்ளழகருக்கு அதிமுக கொடி வண்ணத்தில் மாலை அணிவிக்கப்பட்டிருந்ததால் சர்ச்சை ஏற்பட்டது. ஆன்மீக ரீதியாக நடக்கும் திருவிழாவை அரசியல் ரீதியாக செய்ததற்கு ஆன்மீக அன்பர்கள் கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.

Advertisement