அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல்
Advertisement
சென்னை: அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி நாளை மறுநாள் டெல்லி செல்லவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. கடந்த வாரம் டெல்லியில் அமித்ஷாவை செங்கோட்டையன் சந்தித்த நிலையில் நாளை மறுநாள் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி செல்கிறார். டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து எடப்பாடி பழனிசாமி பேசவுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்திருந்தார். நாளையுடன் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் விதித்த கெடு முடிவடைகிறது. எடப்பாடி பழனிசாமி டெல்லி செல்வதற்கு ஏதுவாக அவரது தருமபுரி சுற்றுப்பயண தேதியில் மாற்றம் செய்துள்ளார்.
Advertisement