தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக கூட்டணிக்கு தவெகவை கொண்டு வர எடப்பாடி பழனிசாமி தந்திரம்: மார்க்சிஸ்ட் செயலாளர் பேட்டி

நாமக்கல்: நாமக்கல்லில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், மாவட்ட மக்கள் கோரிக்கை மற்றும் தொழில் பாதுகாப்பு சிறப்பு மாநாடு நடைபெற்றது.

Advertisement

முன்னதாக கட்சியின் மாநில செயலாளர் சண்முகம் நிருபர்களுக்கு அளித்த பேட்டி:

தமிழ்நாட்டில், உள்நாட்டு தொழில்களை மேம்படுத்த, வேலைவாய்ப்புகளை அதிகரிக்க அரசு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். நாமக்கல் மாவட்டத்தில், கந்துவட்டி கொடுமையால் விசைத்தறி தொழிலாளர்கள் உடல் உறுப்புகளை விற்கும் அவல நிலை உள்ளது. இதுகுறித்து சிறப்பு குழுவின் விசாரணை நடைபெற்று வருகிறது. பாதிக்கப்பட்டவர்களை கடன் தொல்லையிலிருந்து பாதுகாப்பதற்கும், அவர்களுக்கு நிரந்தர வேலை வழங்குவதற்கும், விசைத்தறி தொழிலை பாதுகாக்க தமிழ்நாடு அரசு முன்வர வேண்டும்.

அதிமுகவுடன் தவெக கூட்டணி அமைக்குமா என்பதை, அக்கட்சியின் தலைவர் விஜய் தான் தெளிவுபடுத்த வேண்டும். தன்னுடைய அணிக்கு தவெகவை கொண்டு வர வேண்டும் என்ற நிர்பந்தத்தை உருவாக்குகின்ற தந்திரத்தோடு தான், எடப்பாடி பழனிசாமி அதிமுக கூட்டங்களில் தவெக கொடி காணப்படுவதாக பேசியிருக்கிறார். தவெக, அதிமுகவுடன் கூட்டணி என்றால், பாஜவை அதிமுக நிராகரிக்கிறதா என்பதற்கு எடப்பாடி பழனிசாமி பதில் சொல்ல வேண்டும். தவெக தரப்பிலிருந்து இதுவரை கூட்டணி குறித்து எந்த தகவலும் வெளி வராத நிலையில், எடப்பாடி பழனிசாமி தன்னுடைய விருப்பத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்றே நாங்கள் இதை பார்க்கிறோம்.

தமிழ்நாடு அரசின், தெரு பெயர்களில் உள்ள சாதி பெயர்கள் நீக்கப்படும் என்ற முடிவு வரவேற்கத்தக்கது. சட்டமன்றத் தேர்தலில் எங்கள் கட்சிக்கு கூடுதலான தொகுதிகளை கேட்டுப் பெறுவோம். கட்சி ஆரம்பித்து, 3வது நாளே முதல்வர் ஆக வேண்டும் என்று கூறும் கட்சி நாங்கள் அல்ல. எங்களது பலம் குறித்து எங்களுக்கு தெரியும். அதற்கு உட்பட்டு செயல்படுவோம். இவ்வாறு சண்முகம் கூறினார்.

Advertisement

Related News