தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

அதிமுக கூட்டணியில் இன்னும் பல கட்சிகள் இணையும்: எடப்பாடி பழனிசாமி

திருப்பத்தூர்: யாரை சந்திப்பது என்று முடிவெடுக்க வேண்டியதும்; கூட்டணியில் யாரை இணைப்பது என்பதை முடிவெடுக்க வேண்டியதும் நாங்கள்தான் என அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். தமிழ்நாட்டில் ​2026 சட்​டப்​பேரவை தேர்​தலை​யொட்டி, பிரச்​சார சுற்​றுப்​பயணத்தை மேட்டுப்​பாளை​யத்​தில் அதி​முக பொதுச்செய​லா​ளர் பழனி​சாமி கடந்த 7ம் தேதி தொடங்கினார். இந்த நிலையில் இன்று திருப்பத்தூரில் உள்ள தனியார் உணவகத்தில் எடப்பாடி பழனிசாமி செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது; கூட்டணியில் யாரை இணைப்பது என்பது உள்பட எந்த முடிவாக இருந்தாலும் அதை அதிமுகதான் எடுக்கும்.

பாஜக அதிமுக கூட்டணியில் மீண்டும் ஒ.பி.எஸ் இணைவார் என்று பாஜக மாநிலத் தலைவர் நயினார் கூறி வந்தார். டிடிவியும் ஒ.பி.எஸ். உடன் தேசிய பாஜக தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என வலியுறுத்தி இருந்தார். இது தொடர்பான கேள்விக்கு, ஓ.பன்னீர்செல்வத்தை அதிமுகவில் சேர்ப்பது எந்த காலத்திலும் நடக்காது என்று கூறி, கூட்டணியில் ஒ.பி.எஸ். இணைவார் என நயினார் கூறி வந்த நிலையில் எடப்பாடி பதிலடி கொடுத்துள்ளார். மேலும், நானும் டிடிவியும் ஒன்றாக மேடை ஏறுவோம் என்று நயினார் நாகேந்திரன்தானே கூறினார். அதைப்பற்றி அவரிடமே கேட்டுக் கொள்ளுங்கள் என்று கூறினார்.

மேலும், அன்வர் ராஜா மற்றும் மைத்ரேயன் நீக்கம் குறித்து செய்தியாளர் கேள்வி எழுப்பிய நிலையில், கட்சியின் விதிகளை மீறுபவர்கள் கட்சியில் இருந்து அகற்றுவதும், மீண்டும் பேச்சுவார்த்தை நடத்தி இணைப்பதும், தமிழக அரசியல் வரலாற்றில் புதிதல்ல. அரசியல் கூட்டணிகள் குறித்து தேர்தல் நேரத்தில் மட்டுமே பதில் அளிக்க முடியும். கூட்டணியை முடிவு செய்ய 8 மாத காலம் உள்ளது. மேலும் பல கட்சிகள் எங்கள் கூட்டணியில் இணையும் என்றார்.

Related News