தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுகவில் சோதனையை தகர்த்து எறிந்து சாதனை படைக்கும் காலம் விரைவில் வரும்: செங்கோட்டையன் பேட்டி

 

Advertisement

கோபி: ‘‘அதிமுகவில் சோதனையை தகர்த்து எறிந்து சாதனை படைக்கும் காலத்தை விரைவில் பார்க்கப் போகிறோம்’’ என முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

அதிமுகவிலிருந்து நீக்கப்பட்டவர்களை ஒன்றிணைக்க வேண்டும் என கோரிக்கை வைத்த முன்னாள் அமைச்சரும், கோபி எம்எல்ஏவுமான செங்கோட்டையன் வகித்து வந்த அதிமுக கட்சிப் பதவிகளை எடப்பாடி பறித்தார். இந்நிலையில் தேவர் ஜெயந்தி விழாவில் பங்கேற்ற அவர், அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட சசிகலா, ஓ. பன்னீர்செல்வம், டிடிவி தினகரன் ஆகியோரை சந்தித்தார். இதையடுத்து செங்கோட்டையனை அதிமுகவிலிருந்தே எடப்பாடி பழனிச்சாமி நீக்கியதோடு அவரது ஆதரவாளர்களையும் நீக்கினார்.

இந்நிலையில், கோபியில் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் இன்று நிருபர்களிடம் கூறியதாவது: ‘‘மக்கள் தீர்ப்பே மகேசன் தீர்ப்பு’’ என்ற முறையில் 45 ஆண்டு காலம் எனது பணியை ஆற்றி வருகிறேன். இளவரசரை போல் நான் என்றும் இருந்ததில்லை. எளிமையான வாழ்க்கை நடத்துவதால் தான் 3 முறை வாக்காளர்களை தேர்தல் களத்தில் சந்திக்காமல் நான் இத்தொகுதியில் வெற்றி பெற்றேன். உழைப்பவரை எவராலும் வீழ்த்த இயலாது. அந்த வகையில் எம்ஜிஆர், ஜெயலலிதா வழியில் நாங்களும் பயணிக்கிறோம்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு 2017-18ல் அமைச்சர் பொறுப்பேற்று அதற்கு பிறகு அமைச்சரவையில் பல்வேறு பணிகளை ஆற்றி இருக்கிறோம். அன்றைக்கெல்லாம் இது போன்ற இடர்பாடுகள் வரவில்லை. ஒரு தலைமைக்கு இடர்பாடுகள் சோதனைகள் வரும்போது, நெருக்கடிகள் வரும்போது அந்த இயக்கத்தை நெருக்கடியில் இருந்து காப்பாற்றி வளர்த்தவர்கள் எம்ஜிஆர் மற்றும் ஜெயலலிதா.தியாகத்திலும் சோதனையிலும் பிறந்த இயக்கம்தான் அதிமுக. அதிமுகவில் சோதனையை தகர்த்து எறிந்து சாதனை படைக்கும் காலத்தை விரைவில் பார்க்கப் போகிறோம்.

Advertisement

Related News