தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஏ.ஐ மூலம் போலி படம்: தடுக்கக்கோரிய மனுதள்ளுபடி: உச்ச நீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ஏ.ஐ மூலம் உருவாக்கப்படும் டீப்பேக் படம், வீடியோக்களைத் தடுப்பதற்கும் அதற்கு பயன்படுத்தப்படும் கருவிகளை ஒழுங்குபடுத்துவதற்கும் வழிகாட்டு நெறிமுறைகளை உருவாக்கக் கோரிய மனு மீது உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி சூரியகாந்த் அமர்வில் நேற்று விசாரணை கொண்டது. இதைத்தொடர்ந்து ஒன்றிய அரசு தரப்பில் ஆஜரான சோலி சித்தர் ஜெனரல் உஷார் மேத்தா, இந்த விவகாரம் தொடர்பாக மத்திய அரசு சார்பில் ஏற்கனவே உரிய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வரப்படுகிறது. எனவே இதில் புதியதாக எந்த உத்தரவும் பிறப்பிக்கப்படும் அவசியம் தற்போது இருக்கும் சூழலில் இல்லை என்று தெரிவித்தார். இதையடுத்து மெட்டா நிறுவனம் சார்பாக ஆஜரான மூத்த வழக்கறிஞர், ‘‘அரவிந்த் தாதர், மத்திய அரசு பல சுற்று விவாதங்களையும், ஆலோசனைகளையும் நடத்தியுள்ளதாகவும், அதன் பிறகு இப்போது கிமி விதிகளின் தொகுப்பை வகுத்துள்ளதாகவும் கூறினார்.

Advertisement

தொடர்ந்து பேஸ்புக் நிறுவனம் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் முகுல் ரோஹத்கி, ‘‘ இந்த வரைவு விதிகள் ஏற்கனவே வெளியிடப்பட்டு அனைத்து நிறுவனளுக்கும் கருத்துகளை தெரிவிக்க ஒன்றிய அரசு அரசு வழிவகை செய்து வருகிறது என்று கூறினார். அனைத்து தரப்பு வாதங்களையும் பதிவு செய்து கொண்ட தலைமை நீதிபதி, ஏஐ மற்றும் டீப்பேக் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்துவது குறித்த வழிகாட்டுதல்களை மனுவில் கோரிக்கையாக வைக்கப்பட்டிருக்கிறது. இருப்பினும், அரசாங்கம் ஏற்கனவே வழிகாட்டுதல்களை வடிவமைத்து, கருத்துக்காக பொது களத்தில் வெளியிட்டுள்ளதால், இந்த கட்டத்தில் மேலும் உத்தரவுகளை பிறப்பிக்க எந்த காரணமும் இல்லை. எனவே மனுவை தள்ளுபடி செய்வதாக உத்தரவு பிறப்பித்தார்.

Advertisement