தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒரு விமானமே கருப்புப் பெட்டியாய்க் கருகிக் கிடக்கையில் எந்தக் கருப்புப் பெட்டியை இனிமேல் தேடுவது? :கவிஞர் வைரமுத்து வேதனை

சென்னை : அகமதாபாத் விமான விபத்தில் 241 பேர் உயிரிழந்த நிலையில், கவிஞர் வைரமுத்து கவிதை பாணியில் இரங்கல் தெரிவித்துள்ளார். அவை பின்வருமாறு..
Advertisement

கருப்புப் பெட்டி தேடுவார்கள்

விமானம் விபத்தானால்

ஒரு விமானமே

கருப்புப் பெட்டியாய்க்

கருகிக் கிடக்கையில்

எந்தக் கருப்புப் பெட்டியை

இனிமேல் தேடுவது?

பறிகொடுத்தோர்

பெருமூச்சுகள்

கரும்புகையாய்...

தீப்பிடித்த கனவுகளின்

சாம்பல்களை

அள்ளி இறைக்கிறது

ஆமதாபாத் காற்று

அவரவர் அன்னைமாரும்

கண்டறிய முடியாதே

அடையாளம் தெரியாத

சடலங்களை

புஷ்பக விமானம்

சிறகு கட்டிய

பாடையாகியது எங்ஙனம்?

கடைசி நிமிடத்தின்

கதறல் கேட்டிருந்தால்

தேவதைகள் இறந்திருக்கும்;

மரணம் முதன்முதலாய்

அழுதிருக்கும்

எரிந்த விமானம்

ஃபீனிக்ஸ் பறவையாய்

மீண்டெழ முடியாது

நாம் மீண்டெழலாம்

தவறுகளிலிருந்து

Advertisement