தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்க அனுமதித்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கருணாஸ் நன்றி

சென்னை: விவசாய பயன்பாட்டிற்கு மண் எடுக்க அனுமதித்த முதல்வர் மு.க ஸ்டாலினுக்கு கருணாஸ் நன்றி தெரிவித்துள்ளார். இது குறித்து முக்குலத்தோர் புலிப்படை தலைவர் கருணாஸ் வெளியிட்ட அறிக்கை: மாநிலமெங்கும் உள்ள நீர்த்தேக்கங்கள், ஏரிகள், கண்மாய்கள், குளங்கள், கால்வாய்களிலிருந்து, வட்டாட்சியர் அளவிலேயே எளிய முறையில் அனுமதி பெற்று, கட்டணமின்றி, விவசாய பயன்பாட்டிற்கும் பானைத் தொழில் செய்வதற்கும் மண், வண்டல் மண், களிமண் வெட்டி எடுக்க அனுமதித்து தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இது வரவேற்கத் தக்கது.
Advertisement

நீண்டகால விவசாயிகளின் கோரிக்கையை நிறைவேற்றிய தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு முக்குலத்தோர் புலிப்படை கட்சி சார்பின் எனது நன்றியையும் பாராட்டையும் தெரிவித்துக் கொள்கிறேன்! மேற்கண்ட அறிவிப்பால், விவசாயிகளுக்கு மட்டுமின்றி கண்மாய்கள், குளங்கள், ஏரிகள், உள்ளிட்டவைகளை தூர்வாரும் நடைமுறை எளிமையாகும், விவசாயிகளின் தேவையான பயன்பாட்டிற்கு மண்ணும் எடுத்துக்கொள்ளலாம். மண் எடுப்பதால், நீர்த்தேக்கங்கள் யாவும் மேற்கண்ட செயல்முறையில் எளிதாக தூர்வாரப்படும் சூழல் உருவாகும். இது ஒன்றையொன்று சார்ந்த ஆக்கப்பூர்வமான செயல்பாடு! தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த சிறப்பான அறிவிப்பால், விவசாயிகள் பயன்பெறுவதோடு, நாட்டில் உள்ள நீர்நிலைகளின் கொள்ளளவை உயர்த்தி அதிக மழைநீரைச் சேமித்திடவும், மண்வளம் காக்கவும் வழிவகை செய்யும்.

Advertisement

Related News