தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாய தொழிலாளி உடல் உறுப்புகள் தானம்

*எம்.பி செல்வராஜ் மரியாதை செலுத்தினார்

Advertisement

திருவாரூர் : திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டியில் விபத்தில் மூளைச்சாவு அடைந்த விவசாய தொழிலாளியின் உடல் உறுப்புகள் தானம் செய்யப்பட்டதையடுத்து அவரது உடலுக்கு அரசு சார்பில் எம்.பி செல்வராஜ் மற்றும் ஆர்.டி.ஓ யோகேஷ்வரன் மரியாதை செலுத்தினர்.

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி கட்டிமேடு அருகே எல்லைநாகலடி பகுதியை சேர்ந்தவர் விவசாய தொழிலாளி ஜெகதீஷ் பாபு (36). இந்நிலையில் கடந்த 6ந் தேதி நடைபெற்ற இருசக்கர வாகன விபத்தில் ஜெகதீஷ் பாபு படுகாயமடைந்ததையடுத்து திருத்துறைப்பூண்டி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

இந்நிலையில் தலையில் பலத்த காயம் ஏற்பட்டதால் மேல் சிகிச்சைக்காக திருவாரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில் நேற்று மாலை ஜெகதீஷ் பாபு மூளை சாவு அடைந்ததாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து அவரது உடல் உறுப்புகளை தானம் செய்ய அவரது குடும்பத்தினர் முன்வந்த நிலையில் மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் (பொ) சுமதி தலைமையிலான மருத்துவர்கள் உடல் உறுப்பு தான அறுவை சிகிச்சை செய்து ஜெகதீஷ் பாபுவின் இதயம், சிறுநீரகம், கண், தோல் உள்ளிட்ட உறுப்புகளை தானமாக எடுத்துக் கொண்டனர்.

இதனையடுத்து ஜெகதீஷ் பாபுவின் உடலுக்கு அரசு சார்பில் நாகை எம்.பி செல்வராஜ், மன்னார்குடி ஆர்.டி.ஓ யோகேஸ்வரன், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை முதல்வர் சுமதி, மருத்துவமனை நிலைய அலுவலர் ராமச்சந்திரன் ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

Advertisement

Related News