தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வேளாண் வணிக திருவிழா: 1,57,592 பேர் பங்கேற்றனர்

சென்னை: நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் இரண்டு நாட்கள் நடைபெற்ற வேளாண் வணிக திருவிழாவில் 1,57,592 பேர் பங்கேற்று பயன்பெற்றனர். நந்தம்பாக்கம், சென்னை வர்த்தக மையத்தில் ‘வேளாண் வணிகத் திருவிழா 2025’ கடந்த 27, 28 ஆகிய இரண்டு நாட்கள் நடைபெற்றது. இதில், உழவர்களால் உற்பத்தி செய்யப்படும் வேளாண் விளைபொருட்கள், மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் ஆகியவற்றின் உள்ளூர் மற்றும் ஏற்றுமதி சந்தை வாய்ப்புகளை அதிகரித்து உழவர்கள், உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள், உணவு பதப்படுத்தும் அமைப்புகள், ஏற்றுமதியாளர்கள், பொதுமக்கள், இயற்கை நல ஆர்வலர்கள் என அனைத்து தரப்பினரும் ஒருங்கே பயன்பெறும் வகையில் ‘வேளாண் வணிகத் திருவிழா’ அமைந்திருந்தது.

Advertisement

இரண்டு தினங்களில் 15,420 விவசாயிகள், 1,42,172 பொதுமக்கள் என 1,57,592 பேர் பங்கேற்று பயன்பெற்றனர். ரூ.2.89 கோடி மதிப்பிலான 121 மெட்ரிக் டன் மதிப்புக்கூட்டப்பட்ட உணவு வகைகள், உடனடியாக உண்ணும் உணவுகள், மூலிகை உணவு பொருட்கள், பாரம்பரிய சிறுதானிய உணவு வகைகள் போன்ற பல்வேறு பொருட்கள் பொதுமக்களால் பெரிதும் விரும்பி வாங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

Advertisement