தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இருநாடுகளும் கூட்டு ஒப்பந்தம் பாகிஸ்தானை தாக்கினால் சவுதியை தாக்கியதற்கு சமம்: இந்தியா உறவுக்கு ஆபத்தா?

இஸ்லாமாபாத்: கத்தாரில் உள்ள ஹமாஸ் தலைமை அலுவலகம் மீது இஸ்ரேல் புகுந்து தாக்குதல் நடத்தியதை அடுத்து இஸ்லாமிய நாடுகள் தனித்தனியாக ஆலோசனை நடத்தி வருகின்றன. அதன் ஒரு கட்டமாக பாகிஸ்தான் பிரதமர் ஷெபாஸ் ஷெரீப், சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் ஆகியோர் சந்தித்து ஆலோசனை நடத்தினார்கள். இந்த ஆலோசனை சவுதியில் நடந்தது.

Advertisement

அப்போது இரு நாடுகளின் மீதான எந்தவொரு தாக்குதலும் இருவருக்கும் எதிரான ஆக்கிரமிப்பாக கருதப்படும் என்று முக்கிய கூட்டு ஒப்பந்தத்தில் இருநாட்டு தலைவர்களும் கையெழுத்திட்டனர். இதை பரஸ்பர பாதுகாப்பு ஒப்பந்தம் என்று அறிவித்து உள்ளனர். அதில்,’எந்தவொரு நாட்டிற்கும் எதிரான எந்தவொரு ஆக்கிரமிப்பும் இருவருக்கு எதிரான ஆக்கிரமிப்பாகக் கருதப்படும்’என்று கூறப்பட்டுள்ளது.

1982 ஆம் ஆண்டு முதல் சவுதியும், பாகிஸ்தானும் நெருக்கமாக உள்ளன. பண நெருக்கடியால் தவித்த பாகிஸ்தானுக்கு அதிக அளவு நிதியை சவுதி வழங்கி உள்ளது. அதே போல் இந்தியாவுடனும் சவுதி நெருக்கமாக உள்ளது. இந்த புதிய ஒப்பந்தம் மூலம் இந்தியா, சவுதி உறவு பாதிக்கப்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இந்த ஒப்பந்தம் குறித்து கவலை தெரிவித்த மூத்த அமெரிக்க தூதர் சல்மே கலீல்சாத்,’ இது பல கேள்விகளை எழுப்புகிறது.

இந்த ஒப்பந்தத்தில் ரகசிய இணைப்புகள் உள்ளதா, அப்படியானால், அவை என்ன சொல்கின்றன? இந்த ஒப்பந்தம் சவுதி அரேபியா மற்றும் அமெரிக்க இடையிலான பாதுகாப்பில் நம்பிக்கை குறைந்து வருவதற்கான அறிகுறியா? பாகிஸ்தானிடம் இஸ்ரேல் உட்பட மத்திய கிழக்கு முழுவதும் உள்ள இலக்குகளைத் தாக்கக்கூடிய அணு ஆயுதங்கள் மற்றும் விநியோக அமைப்புகள் உள்ளன. அமெரிக்காவில் உள்ள இலக்குகளை அடையக்கூடிய அமைப்புகளையும் அது உருவாக்கி வருகிறது’ என்றார்.

Advertisement