தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இளங்கலைப் பட்டப் படிப்புகளில் சேர வயது வரம்பு தளர்வு

தமிழக கலை அறிவியல் கல்லுாரிகளில் இளநிலைப் பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான வயது வரம்புத் தளர்வை அதிகப்படுத்தி தமிழ்நாடு அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

Advertisement

தமிழகத்தில் மொத்தம் 1,626 கலை அறிவியல் கல்லுாரிகள் உள்ளன. இக்கல்லுாரி களில் இளநிலை பட்டப்படிப்புகளில் சேர்வதற்கான வயது வரம்பாகப் பொது பிரிவினருக்கு 21 வயதும், எஸ்.சி., - எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்குக் கூடுதலாக 3 ஆண்டுகள் தளர்வுடன் 24 வயதும் நிர்ணயிக்கப்பட்டு இருந்தது. இந்நிலையில், தற்போது இளங்கலைப் பட்டப்படிப்புகளில் சேர்க்கை பெற வயது வரம்பு 40 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. எஸ்.சி.,-எஸ்.டி., மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் வயது வரம்புத் தளர்வும், பெண்களுக்கு மூன்று ஆண்டுகள் வயது வரம்புத் தளர்வும் அளிக்கப்பட்டுள்ளது. இது, நடப்பாண்டு முதலே அமலுக்கு வந்துள்ளது. அதன்படி கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இளநிலைப் பட்டப் படிப்புகளில் பொதுப் பிரிவினர் சேர்வதற்கான உச்ச வயதுவரம்பு 40 ஆகவும், மாற்றுத்திறனாளிகளுக்கு 45 ஆகவும், இடஒதுக்கீட்டுப் பிரிவினர் மற்றும் பெண்களுக்கு 43 ஆகவும் நிர்ணயம் செய்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement