தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

விமானம் தரையிறங்கிய பிறகு பயணிகளின் பெட்டிகள் 30 நிமிடத்தில் டெலிவரி: ஏர்லைன்ஸ்களுக்கு உத்தரவு

Advertisement

புதுடெல்லி: விமானம் தரையிறங்கிய அடுத்த 30 நிமிடத்தில் அனைத்து பயணிகளுடன் பெட்டிகளும் வழங்கப்பட வேண்டுமென விமான போக்குவரத்து பாதுகாப்பு (பிசிஏஎஸ்) அமைப்பு உத்தரவிட்டுள்ளது. ஒன்றிய விமான போக்குவரத்து அமைச்சர் ஜோதிராதித்யா சிந்தியா உத்தரவின் பேரில், விமான போக்குவரத்து பாதுகாப்பு அமைப்பு கடந்த ஜனவரி மாதம் 6 முக்கிய விமான நிலையங்களில் பயணிகளின் பெட்டிகள் விநியோக பணியை ஆய்வு செய்தது. இதைத் தொடர்ந்து, ஏர் இந்தியா, இண்டிகோ, ஆகாசா ஏர், ஸ்பைஸ் ஜெட், விஸ்தாரா, ஏஐஎக்ஸ் கனெக்ட் மற்றும் ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய 7 விமான நிறுவனங்களுக்கு கடந்த 16ம் தேதி பிறப்பித்த உத்தரவில் கூறியிருப்பதாவது:

அனைத்து விமான நிறுவனங்களின் செயல்திறன் வாரந்தோறும் கண்காணிக்கப்பட்டு வருகிறது. அவை மேம்படுத்தப்பட்டுள்ளன. ஆனால் இன்னும் முழு விதிமுறைகளை பூர்த்தி செய்யும் வகையில் இல்லை. சேவை தர விதிகளின்படி, விமானம் தரையிறங்கிய அடுத்த 10வது நிமிடத்தில் பயணிகளின் முதல் பெட்டி டெலிவரி செய்யத் தொடங்க வேண்டும். 30 நிமிடத்தில் கடைசி பெட்டியை டெலிவரி செய்ய வேண்டும். எனவே, விமானம் தரையிறங்கிய அரை மணி நேரத்தில் அனைத்து பயணிகளின் பெட்டிகளும் விநியோகிக்கப்படுவதை விமான நிறுவனங்கள் உறுதி செய்ய வேண்டும்.

இவ்வாறு கூறப்பட்டுள்ளது.

Advertisement