தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆப்கானிஸ்தான் அமைச்சர் நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுப்பு பெண்கள் சக்தி என்று மோடி பேசுவது வெற்று கோஷம்: செல்வப்பெருந்தகை கண்டனம்

சென்னை: ஆப்கானிஸ்தான் அமைச்சர் நிகழ்ச்சியில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட நிலையில், பெண்கள் சக்தி என்று பிரதமர் மோடி பேசுவது வெற்றுக் கோஷம் என்று செல்வப்பெருந்தகை கண்டனம் தெரிவித்துள்ளார். தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை நேற்று தனது டிவிட்டர் பதிவு: இந்தியா வந்துள்ள ஆப்கானிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சர் அமிர்கான் முட்டாகி பங்கேற்ற பத்திரிகையாளர்கள் சந்திப்பில் பெண் நிருபர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்ட செயல் கண்டனத்திற்குரியது. சர்வதேச பெண் குழந்தைகள் தினத்தை கொண்டாடும் நாளில் இதுபோன்ற நிகழ்வுகள் இந்திய அரசியலமைப்பு வழங்கும் சம உரிமைக்கும், பெண்களின் அடிப்படை மனித உரிமைக்கும் எதிரானது.

Advertisement

பெண் செய்தியாளர்களின் பங்கு, நம் நாட்டின் ஊடக சுதந்திரத்தையும், ஜனநாயகத்தின் வலிமையையும் பிரதிபலிக்கிறது. பெண்களை விலக்கும் இத்தகைய நிகழ்வுகள், நம் சமூகத்தில் பாலின சமத்துவத்திற்கு எதிரான பின்னடைவை காட்டுகின்றன. பெண்கள் சக்தி என்று பிரதமர் மோடி பேசுவது, வெற்றுக் கோஷம் என்பது இதன்மூலம் தெளிவாகிறது. ஒன்றிய பாஜ அரசு உடனடியாக விளக்கம் அளித்து, இனி இப்படியான பாகுபாடுகள் நடைபெறாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்திய பெண்களின் குரலை மவுனப்படுத்த முயலும் எந்தச் செயலையும் மக்கள் ஒருபோதும் ஏற்கமாட்டார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Advertisement