தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

8 பேர் உயிரிழந்த விவகாரம் பல் மருத்துவர் 3 நாளில் விளக்கம் அளிக்க நோட்டீஸ்

Advertisement

வாணியம்பாடி: வாணியம்பாடி தனியார் பல் மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற 8 பேர் உயிரிழந்த விவகாரத்தில் மருத்துவர் 3 நாளில் விளக்கம் அளிக்க நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடியில் உள்ள தனியார் பல் மருத்துவமனையில் கடந்த 2023ம் ஆண்டு சிகிச்சை பெற்ற 8 பேர் அடுத்தடுத்து உயிரிழந்ததாக புகார்கள் எழுந்தது. தொடர்ந்து, தமிழ்நாடு பொதுசுகாதார இயக்குனரகம் மற்றும் வேலூர் தனியார் மருத்துவமனை இணைந்து நடத்திய ஆய்வில், ஒருமுறை பயன்படுத்திய மருத்துவ கருவியை சுகாதாரமற்ற முறையில் மீண்டும் நோயாளிகளுக்கு பயன்படுத்தியதால் பாக்டீரியா தொற்று ஏற்பட்டு 8 உயிரிழப்பு நிகழ்ந்துள்ளதாக ஆய்வு அறிக்கை வெளியானது.

தொடர்ந்து, திருப்பத்தூர் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் ஞான மீனாட்சி நேற்று முன்தினம் தனியார் பல் மருத்துவமனையில் ஆய்வு செய்தார். அதனடிப்படையில், கடந்த 2023ம் ஆண்டு செயல்பட்டு வந்த கிளினிக், தற்போது வேறு பெயரில் நடைபெற்று வருவதற்கான ஆவணங்கள் குறித்தும், 8 பேர் சிகிச்சை மேற்கொண்ட விவரங்கள் குறித்து விளக்கம் கேட்டு பல் மருத்துவர் அறிவரசனுக்கு நேற்று தபால் மூலம் நோட்டீஸ் மாவட்ட மருத்துவ இணை இயக்குனர் அனுப்பினார். மேலும், 3 நாட்களுக்குள் விளக்கம் அளிக்குமாறும், தவறும் பட்சத்தில் சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என நோட்டீசில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement