தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில், தொண்டர்கள் கருத்தையே நான் பிரதிபலித்தேன்: செங்கோட்டையன் பேச்சு

ஈரோடு : அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில், தொண்டர்கள் கருத்தையே தாம் பிரதிபலித்ததாக அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் மனம் திறந்து பேசுகிறேன் எனக் கூறிவிட்டு, கட்சியை ஒன்றிணைக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என்று ஈரோட்டில் செய்தியாளர்கள் மத்தியில் பேசியிருந்தார். அதிமுகவில் இருந்து பிரிந்து சென்றவர்களை ஒன்றிணைக்கும் வேலைகளை 10 நாட்களில் மேற்கொள்ள வேண்டும் என்று கட்சியின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு செங்கோட்டையன் கெடு விதித்தார். இந்த காலக்கெடு இன்றுடன் நிறைவு பெறுகிறது.

Advertisement

இந்நிலையில் ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிப்பாளையத்தில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த செங்கோட்டையன், " மாற்றான் தோட்டத்து மல்லிகைக்கும் மனம் உண்டு. மறப்போம் மன்னிப்போம் என பேரறிஞர் அண்ணாவின் எழுத்துகளை இன்று நினைவூட்ட விரும்புகிறேன்.அண்ணாவின் பெயரால் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தை எம்.ஜி.ஆர் உருவாக்கினார். இதை ஜெயலலிதா கட்டி காத்தார். எம்.ஜி.ஆர்., ஜெயலலிதாவின் கனவை நிறைவேற்றவே நான் மனம் திறந்து பேசினேன். நான் மனம் திறந்து பேசியதை அதிமுக தொண்டர்கள் பெருமளவில் வரவேற்றுள்ளனர். அதிமுக ஒன்றிணையும் விவகாரத்தில், மக்கள், தொண்டர்கள் கருத்தையே நான் பிரதிபலித்தேன். அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்பது புரிய வேண்டியவர்களுக்கு புரியும். அதிமுக 2026 தேர்தலில் வெற்றி பெற எல்லாரும் உறுதுணையாக இருந்து பணிகளை மேற்கொள்ள வேண்டும்", இவ்வாறு பேசினார்.

Advertisement

Related News