தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

“அதிமுக ஒன்றிணைய வேண்டும், வலிமை பெற வேண்டும் என்ற நோக்கத்தில் டெல்லியில் அமித்ஷாவை சந்தித்து பேசினேன்” :செங்கோட்டையன்

சென்னை: அதிமுக ஒருங்கிணைக்க வேண்டும் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் எடப்பாடி பழனிசாமிக்கு 10 நாட்கள் கெடு விதித்தார். இதன் எதிரொலியாக செங்கோட்டையனை கட்சி பொறுப்புகளில் இருந்து நீக்கம் செய்து எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டார். இதனால் அதிர்ச்சி அடைந்த செங்கோட்டையன், தான் அடுத்து என்ன செய்வது என்று தெரியாமல், நேற்று காலையில் டெல்லி புறப்பட்டுச் சென்றார். மன நிம்மதிக்காக தான் ஹரித்வார் செல்வதாக கூறிய செங்கோட்டையன், டெல்லியில் அமித்ஷாவை சந்தித்தார்.

Advertisement

இந்த நிலையில், டெல்லி பயணத்தை முடித்துக் கொண்டு கோவைக்கு திரும்பிய அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன், "அதிமுகவை ஒருங்கிணைக்க வேண்டும் என வலியுறுத்தப்படும் கருத்துகள் வரவேற்கத்தக்கது. ஹரித்வார் செல்வதாக கூறினேன்; உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்திக்க அனுமதி கிடைத்தது. ஆகவே அவரை சந்தித்துப் பேசினேன். ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமனையும் சந்தித்து தற்போதைய அரசியல் சூழல் குறித்து ஆலோசித்தேன். அதிமுகவை ஒருங்கிணைப்பதன் அவசியம் குறித்து அமித்ஷா, நிர்மலா சீதாராமனிடம் எடுத்துரைத்தேன். அனைவரும் ஒன்றிணைய வேண்டும்; வலுப்பெற வேண்டும் என்று வலியுறுத்தினேன். அமித்ஷாவை நான் சந்தித்து பேசிய போது, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் வந்தார். அப்போது, ஈரோட்டில் ஏற்காடு எக்ஸ்பிரஸ் புறப்படும் நேரத்தை மாற்ற வேண்டும் என்று அவரிடம் கோரிக்கை வைத்தேன்,"இவ்வாறு தெரிவித்தார்.

Advertisement