தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான ஆதிகலைக்கோல் பயிற்சி பட்டறை

சென்னை: ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான ஆதிகலைக்கோல் பயிற்சி பட்டறையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 22ம் தேதி சென்னை வர்த்தக மையத்தில் தொடங்கி வைக்கிறார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை மூலமாக தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டுக்கழகம் (தாட்கோ) சார்பாக தமிழ்நாட்டில் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியின இளைஞர்களுக்கான ஆதிகலைக்கோல் பயிற்சி பட்டறை சென்னை வர்த்தக மையத்தில் வருகிற 22, 23 மற்றும் 24ம் தேதி நடைபெற உள்ளது.

Advertisement

ஆதிகலைகோல் பயிற்சி பட்டறையை துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் 22ம் தேதி தொடங்கி வைக்கிறார். குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் துறை அமைச்சர் தா.மோ.அன்பரசன் முன்னிலை வகிக்கிறார். ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அமைச்சர் மா.மதிவேந்தன் தலைமை தாங்குகிறார். தமிழ்நாடு ஆதிதிராவிடர் வீட்டுவசதி மற்றும் மேம்பாட்டு கழக தலைவர் இளையராஜா சிறப்புரையாற்றுகிறார்.

இப்பயிற்சி பட்டறையில் பழமையான கலைகளையும் அதன் பரிணாம வளர்ச்சியையும் மாணவர்களுக்கு கற்றுத் தரும் ஒரு நிகழ்வாக வடிவமைக்கப்பட்டு நாட்டுப்புறக் கலை, நாடகக் கலை, இலக்கிய கலை மற்றும் காட்சி கலை ஆகிய கலைகளில் சிறந்து விளங்கும் வல்லுநர்களை கொண்டு மூன்று நாட்கள் பயிற்சி பயிலரங்கம் நடைபெற உள்ளது.

Advertisement

Related News