ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் தொடர்பான வழக்கு: ஐகோர்ட் கிளை ஆணை
மதுரை: ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள், விடுதிகள் தரத்தை உயர்த்தக் கோரி ஐகோர்ட் கிளையில் செல்வகுமார் என்பவர் வழக்கு தொடர்ந்தார். ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநரை நேரில் சந்தித்து மனு அளிக்க மனுதாரருக்கு ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. மனுவைப் பெற்று ஆதிதிராவிடர் நலத் துறை இயக்குநர் 6 வாரங்களில் உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் தெரிவித்தனர்.
Advertisement
Advertisement