நீதித்துறையின் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்: மாவட்ட நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்
மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மொபைல் போன் மூலம் வழக்கறிஞர்களுடன் பேசுவது, தனது அறையில் தேவையில்லாமல் வழக்கறிஞர்களை சந்திப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகள் பிரச்னை இல்லாமல் தொடர்வது, பொது விஷயங்கள் தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேசலாம். பணி நேரத்தில் தேவையில்லாமல் மொபைல் போனில் நீண்ட நேரம் பேசக்கூடாது. இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இந்த விஷயம் மிக தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.