தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நீதித்துறையின் நெறிமுறைகளை கடைபிடிக்க வேண்டும்: மாவட்ட நீதிபதிகளுக்கு உயர் நீதிமன்றம் அறிவுறுத்தல்

சென்னை: நீதித்துறை நெறிமுறைகளை கண்டிப்பாக கடைபிடிக்குமாறு தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள மாவட்ட நீதிமன்ற நீதிபதிகளுக்கு சென்னை உயர் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது. சென்னை உயர் நீதிமன்ற பதிவாளர் ஜோதிராமன் வெளியிட்டுள்ள அறிவிப்பாணை: தமிழகம் மற்றும் புதுச்சேரி நீதிமன்ற மாவட்ட நீதிபதிகள் நீதித்துறையின் மீது மக்கள் வைத்திருக்கும் நம்பிக்கையை தொடர்ந்து உறுதிப்படுத்த வேண்டும். தனிப்பட்ட முறையிலோ அல்லது அலுவலக ரீதியாகவோ தவறு செய்வதை தவிர்க்க வேண்டும். வழக்கறிஞர்களுடன் குறிப்பாக ஒரே நீதிமன்றங்களில் தொழில் செய்யும் வழக்கறிஞர்களுடன் நெருங்கிய தொடர்பில் இருக்க கூடாது. ஒவ்வொரு நீதிபதியும் பொதுமக்களின் பார்வையிலேயே உள்ளதால் அவர்கள் எந்த தவறையும் செய்யாமல் கவனமாக இருக்க வேண்டும்.
Advertisement

மாவட்ட நீதிமன்ற நீதிபதிகள் மொபைல் போன் மூலம் வழக்கறிஞர்களுடன் பேசுவது, தனது அறையில் தேவையில்லாமல் வழக்கறிஞர்களை சந்திப்பது ஆகியவற்றை தவிர்க்க வேண்டும். நீதிமன்ற நடவடிக்கைகள் பிரச்னை இல்லாமல் தொடர்வது, பொது விஷயங்கள் தொடர்பாக வழக்கறிஞர்கள் சங்கங்களின் நிர்வாகிகளுடன் பேசலாம். பணி நேரத்தில் தேவையில்லாமல் மொபைல் போனில் நீண்ட நேரம் பேசக்கூடாது. இந்த அறிவுறுத்தல்களை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். தவறும் பட்சத்தில் இந்த விஷயம் மிக தீவிரமாக எடுத்துக்கொள்ளப்படும். இவ்வாறு அறிவிப்பாணையில் கூறப்பட்டுள்ளது.

 

Advertisement

Related News