தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வழக்கை ரத்து செய்யக்கோரி ஆதவ் அர்ஜுனா மனு காவல்துறை தரப்பில் கடும் எதிர்ப்பு: சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணை தள்ளிவைப்பு

சென்னை: தவெக தேர்தல் பிரசார மேலாண்மை பொதுச் செயலாளர் ஆதவ் அர்ஜூனா தனது எக்ஸ் தளத்தில், இலங்கை, நேபாளம் போல் அரசின் அடுக்குமுறைக்கு எதிராக ஜென் இசட், ஜென் எக்ஸ் புரட்சி ஏற்படும் என்று பதிவிட்டிருந்தார். இதையடுத்து, கலவரத்தை தூண்டுவது, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது உள்ளிட்ட பிரிவுகளில் ஆதவ் அர்ஜுனாவுக்கு எதிராக சைபர் குற்றப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கை ரத்து செய்ய கோரி ஆதவ் அர்ஜூனா சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

Advertisement

இந்த மனு நீதிபதி ஏ.டி.ஜெகதீஷ் சந்திரா முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, ஆதவ் அர்ஜுனா தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் மனு சிங்வி, எக்ஸ் தளத்தில் மேற்கொண்ட பதிவு 34 நிமிடங்களில் நீக்கப்பட்டு விட்டது. பதிவிட்டதில் எந்த உள்நோக்கமும் இல்லை. ஆரம்ப கட்ட விசாரணை நடத்தப்படாமல் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது என்று வாதிட்டார். அப்போது குறுக்கிட்ட நீதிபதி, எக்ஸ் தளத்தில் பதிவு செய்து விட்டு பின்னர் அதை நீக்கியதை ஒப்புக்கொள்கிறீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.

அதற்கு மூத்த வழக்கறிஞர், ஆம். பதிவு நீக்கப்படவில்லை என்றாலும் கூட வழக்குப் பதிவு செய்ய முகாந்திரம் இல்லை. ஆதவ் அர்ஜுனா குற்றப்பின்னணி கொண்டவர் அல்ல. எதிர்கட்சி என்ற அடிப்படையில் கோபமாக சில கருத்துகளை பதிவு செய்துள்ளார் என்றார். இதைத்தொடர்ந்து, காவல் துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர்.இளங்கோ, செப்டம்பர் 27 ம் தேதி கூட்ட நெரிசல் நடந்த பின்னர் முக்கிய பொறுப்பில் உள்ள ஆதவ் அர்ஜுனா அங்கிருந்து தப்பியோடி விட்டார். இந்த சம்பவத்தில் ஆதவ் அர்ஜூனாவுக்கும் பங்கு உள்ளது.

சம்பவம் நடந்த பிறகு 28ம் தேதி நள்ளிரவு எக்ஸ் தளத்தில் கலவரத்தை தூண்டும் வகையில் பதிவிட்டுள்ளார். இது சம்பந்தமாக காவல்துறைக்கு வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்த அதிகாரம் உள்ளது. மெசேஜ்களை பார்வேடு செய்தாலே குற்றம் என்ற தீர்ப்புகள் உள்ளன. பதிவை நீக்கி விட்டாலும் கூட 1 லட்சம் பேர் வரை அந்த பதிவை பார்த்துள்ளனர். விசாரணைக்கு ஆஜராக சம்மன் அனுப்பியும் ஆதவ் அர்ஜுனா ஆஜராகவில்லை என்று வாதிட்டார். வாதம் நிறைவடையாததால் விசாரணையை நாளைக்கு தள்ளிவைத்த நீதிபதி, வழக்கில் இறுதி அறிக்கை தாக்கல் செய்யக் கூடாது என்று உத்தரவிட்டார்.

Advertisement