தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதானி சிமெண்ட் ஆலைக்கு ஒப்புதல் வழங்கும் வகையில், ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் விதிமுறைகளில் புதிய திருத்தம்!!

மும்பை : மராட்டிய மாநிலத்தில் அதானி சிமெண்ட் ஆலைக்கு ஒப்புதல் வழங்கும் வகையில், ஒன்றிய அரசு சுற்றுச்சூழல் விதிமுறைகளில் புதிய திருத்தம் கொண்டு வந்துள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன. ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சகம் கடந்த 26ம் தேதி சுற்றுச்சூழல் விதிமுறைகளில் புதிய வரைவு விதிமுறைகளை வெளியிட்டது. சில குறிப்பிட்ட விதிமுறைப்படி, சிமெண்ட் ஆலை தொடங்கப்பட்டால், அதற்கு சுற்றுச்சூழல் விலக்கு அளிக்கலாம் என்ற நடைமுறை கொண்டு வரப்பட்டுள்ளது. ரயில் அல்லது மின் வாகனங்கள் மூலம் மூலப்பொருட்கள் அல்லது இறுதி தயாரிப்பு பொருட்கள் கொண்டு செல்லப்பட்டால், சுற்றுச்சூழல் விலக்கு அளிக்கலாம் என்றும் வரைவு வெளியிடப்பட்டுள்ளது.

Advertisement

இது இறுதி செய்யப்பட்டால், 2006 சுற்றுச்சூழல் விதிமுறைகளில் சேர்க்கப்படும் என்று கூறப்படுகிறது. மராட்டிய மாநிலம் கல்யாண் பகுதியில் அதானி நிறுவனம் ஆண்டுக்கு 60 லட்சம் மெட்ரிக் டன் சிமெண்ட் உற்பத்தி செய்யும் ஆலையை தொடங்குகிறது. மும்பை கல்யாண் அருகே ஆம்பிவிலி ரயில் நிலையம் எதிரே இந்த ஆலை தொடங்கப்பட்டால் கடும் சுற்றுச்சூழல் பாதிப்பு ஏற்படும் என்று கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், ஒன்றிய அரசு இந்த ஆலைக்கு சுற்றுச்சூழல் விலக்கு அளிக்கும் வகையில் புதிய வரைவு விதிமுறை வெளியிடப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

Advertisement

Related News