தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங்யை சந்தித்தார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்

சியோல்: சீன பொருட்களுக்கு எதிராக கூடுதல் வரி விதித்த நிலையில் சீன அதிபர் ஜின்பிங்யை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்தார். தென்கொரியாவின் புசான் நகரில் நடைபெற்று வரும் இந்த சந்திப்பின் முடிவில் இருநாடுகள் இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Advertisement

அமெரிக்க அதிபராக டொனால் ட்ரம்ப் 2-வது முறையாக பதவியேற்ற பிறகு உலக நாடுகளுக்கு எதிராக கூடுதல் வரி விதித்து வருகிறார். அந்த வகையில் சீன பொருட்களுக்கு எதிராக 100 % கூடுதல் வரியை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் அறிவித்துள்ளார்.

இந்த நிலையில், அதிபர் டிரம்ப் தற்போது தென்கொரியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். அங்கு புஷான் நகரில் நாளை நடைபெற உள்ள ஆசியா-பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்கிறார். புஷான் நகரில் நாளை தொடங்க உள்ள இந்த மாநாட்டில் அமெரிக்கா, சீனா, ஜப்பான், இந்தியா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள் பங்கேற்க உள்ளனர். உலக பொருளாதாரம், வர்த்தக ஒப்பந்தங்கள், தொழில்நுட்ப ஒத்துழைப்பு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு போன்ற பல முக்கிய அம்சங்கள் குறித்து ஆலோசனை நடைபெறவுள்ளது.

ஆசியா-பசிபிக் பிராந்திய பொருளாதார கூட்டமைப்பு மாநாட்டில் கலந்து கொள்ள தென்கொரியா சென்றுள்ள சீன அதிபர் ஜின்பிங்யை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சந்திப்பில், பரஸ்பர வரி விதிப்பு, அரிய வகை கனிம ஏற்றுமதிக்கான கட்டுப்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தி வருகின்றனர். இதில் சீனா-அமெரிக்கா இடையே வர்த்தக ஒப்பந்தம் கையெழுத்தாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் சீனா மீதான வரி விதிப்புகளை தளர்த்துமாறு ஜின்பிங் டிரம்பிடம் வலியுறுத்த உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 6 ஆண்டுகளுக்கு பிறகு இரு நாட்டு தலைவர்களும் சந்தித்து இருப்பது முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.

Advertisement