தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்றவர் மரணம்

சென்னை: புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியைச் சேர்ந்தவர் ரியான் (29). இவர், சென்னையில் தங்கி கூலி வேலை செய்து வந்துள்ளார். மது போதைக்கு அடிமையாக இருந்த ரியான், சென்னை அருகே போதை மறுவாழ்வு மையத்தில் ஏற்கனவே சிகிச்சை பெற்று இருந்தார். பின்னர் திருவள்ளூர் மாவட்டம், பெரியபாளையம் அடுத்த, வடமதுரை பகுதியில் அமைந்துள்ள தனியார் போதை மறுவாழ்வு சிகிச்சை மையத்தில் கடந்த மாதம் சிகிச்சைக்காக ரியான் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

Advertisement

இந்நிலையில், கடந்த ஒரு வாரமாக ரியானுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு மருத்துவமனைக்குச் சென்று சிகிச்சை பெற்று வந்ததாக கூறப்படுகிறது. நேற்று மாலை மீண்டும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதால் பெரியபாளையம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு ரியானை அழைத்துச் சென்றுள்ளனர். அங்கு, அவரை பரிசோதித்த மருத்துவர்கள் வரும் வழியிலேயே ரியான் இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

இதுகுறித்து, தகவலறிந்த பெரியபாளையம் போலீசார் ரியான் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இந்த சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement