தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கொடைக்கானலில் பரபரப்பு; போதைக்காளானில் தேன் ஊற்றி ருசிப்பு: வலைத்தளங்களில் வைரலாகும் வீடியோ

Advertisement

கொடைக்கானல்: கொடைக்கானலில் போதைக்காளான்களை சேகரித்து அதில் தேன் ஊற்றி ருசிக்கும் காட்சி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இதுகுறித்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் அமைந்துள்ள உலக புகழ்பெற்ற சுற்றுலா தலமான கொடைக்கானலுக்கு வரும் சுற்றுலாப்பயணிகளை குறி வைத்து, சமூக விரோத கும்பல் போதைக்காளான்களை விற்று வருகிறது. கொடைக்கானல் நகரம் மட்டுமின்றி மேல்மலை கிராமங்களான பூண்டி, மன்னவனூர், கூக்கால் உள்ளிட்ட பகுதிகளில் போதைக்காளான், கஞ்சா விற்பனை நடப்பதாக பொதுமக்கள் புகார் கூறுகின்றனர். மேல்மலை பகுதியில் போதைக்காளான் பறிப்பது, அதில் தேன் ஊற்றி உண்பது போன்ற காட்சிகள் அடங்கிய வீடியோ பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும், போதைக்காளானை எவ்வாறு பயன்படுத்த வேண்டும்? எந்த பகுதியில் தாராளமாக கிடைக்கும் என சிலர் சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டுள்ளனர். இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறியதாவது, ‘‘கொடைக்கானலுக்கு வரக்கூடிய சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து போதை காளான், கஞ்சா விற்பனை அமோகமாக நடந்து வருகிறது. ஆபத்தை உணராமல் போதைக்காளான், கஞ்சாவை நுகரும் இளைஞர்கள் இந்த பழக்கத்திற்கு அடிமையாகி தங்களது வாழ்வை தொலைத்து விடுவர். எனவே, கொடைக்கானல் மலைப்பகுதியில் போதைக்காளான், கஞ்சா விற்பனையை தடுக்க சிறப்பு குழுவை ஏற்படுத்த வேண்டும்’’ என்றனர்.

Advertisement

Related News