தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதானி நிறுவனத்தில் எல்ஐசி முதலீடுகளுக்கு நிதி அமைச்சகம் ஆலோசனை அளிக்கவில்லை: மக்களவையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

புதுடெல்லி: அதானி குழுமத்துக்கு ஆதரவாக அரசுக்கு சொந்தமான எல்ஐசி நிறுவனம் முதலீடு செய்வதாக கடந்த அக்டோபரில் தி வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை செய்தி வெளியிட்டது. கடந்த மே மாதம் அதானி துறைமுகங்கள் மற்றும் சிறப்பு பொருளாதார மண்டலத்தில் எல்ஐசி ரூ.5000 கோடி முதலீடு செய்துள்ளதை அந்த கட்டுரையில் சுட்டி காட்டப்பட்டிருந்தது. ஆனால், வாஷிங்டன் போஸ்ட் பத்திரிகை குற்றச்சாட்டுகள் தவறானவை, ஆதாரமற்றவை, உண்மைக்கு புறம்பானவை என்று எல்ஐசி மறுப்பு தெரிவித்தது.

Advertisement

இந்த நிலையில், இது தொடர்பாக மக்களவையில் கேட்கப்பட்ட கேள்விக்கு ஒன்றிய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் நேற்று எழுத்து மூலம் அளித்த பதிலில் கூறியுள்ளதாவது: நாட்டின் மிகப்பெரிய காப்பீட்டு நிறுவனமான எல்ஐசி, பல ஆண்டுகளாக, அடிப்படைகள், விரிவான உரிய விதிகளின் அடிப்படையில் நிறுவனங்களில் முதலீட்டு முடிவுகளை எடுத்துள்ளது. நிறுவப்பட்ட நிலையான இயக்க நடைமுறைகளை பின்பற்றி, அதானி குழுமத்தின் பட்டியலிடப்பட்ட 6 நிறுவனங்களின் பங்குகளை வாங்கியுள்ளது. அதன் மதிப்பு ரூ.38,658.85 கோடியாகும். மேலும் ரூ.9,625.77 கோடியை கூட்டு நிறுவனத்தின் கடன் ஆவணங்களில் முதலீடு செய்துள்ளது. எல்ஐசி நிதியின் முதலீடு தொடர்பான விஷயங்கள் தொடர்பாக நிதி அமைச்சகம் எல்ஐசிக்கு எந்த ஆலோசனையோ அல்லது வழிகாட்டுதலையும் வழங்குவதில்லை.

அரசுக்குச் சொந்தமான காப்பீட்டு நிறுவனத்தின் முதலீட்டு முடிவுகள், இடர் மதிப்பீடு மற்றும் நம்பகமான இணக்கத்தைப் பின்பற்றி அந்த நிறுவனம் எடுக்கிறது. அதானி துறைமுகங்கள், சிறப்பு பொருளாதார மண்டலம்(ஏபிஎஸ்இஇசட்) வெளியிட்ட பாதுகாக்கப்பட்ட மாற்ற முடியாத கடன் பத்திரங்களில் எல்ஐசி ரூ. 5,000 கோடி முதலீடு செய்துள்ளது. அங்கீகரிக்கப்பட்ட கொள்கைகளின்படி நிறுவப்பட்ட நிலையான செயல்பாட்டு நடைமுறைகளை பின்பற்றி இந்த முதலீட்டை செய்யப்பட்டுள்ளது என்றார்.

Advertisement