தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

அதானி துறைமுக கன்டெய்னரில் வெள்ளி கட்டி கடத்தல் வழக்கில் 12 பேர் கைது: தனிப்படையினருக்கு வெகுமதி

Advertisement

பொன்னேரி: சென்னை ஸ்ரீபெரும்புதூரை சேர்ந்த ஒரு தனியார் ஏற்றுமதி-இறக்குமதி நிறுவனம், கடந்த 4ம் தேதி லண்டனிலிருந்து 2 கன்டெய்னர்களில் 39 டன் வெள்ளிக் கட்டிகளை இறக்குமதி செய்திருந்தது. இந்த வெள்ளிக் கட்டிகள் அனைத்தும் லண்டனில் இருந்து கப்பல் மூலமாக மீஞ்சூர் அருகே காட்டுப்பள்ளியில் உள்ள அதானி துறைமுகத்துக்கு வந்தது, பின் ஸ்ரீபெரும்புதூரில் உள்ள தனியார் நிறுவனத்தின் வேர்ஹவுஸ் நிறுவனத்தில் ஆய்வு செய்யப்பட்டது. இதில், 2 கன்டெய்னர்களில் இருந்தும் சுமார் ரூ.9 கோடி மதிப்பிலான 922 கிலோ எடையில் 30 வெள்ளிக் கட்டிகள் மாயமாகியிருப்பது அந்த தனியார் நிறுவன அதிகாரிகளுக்குத் தெரியவந்தது.

இதைத் தொடர்ந்து, அந்த 2 கன்டெய்னர்களில் இருந்த ஜிபிஎஸ் கருவிகளை ஆய்வு செய்தனர். இதுகுறித்து காட்டூர் காவல் நிலையத்தில் அந்த தனியார் நிறுவனத்தின் மேலாளர் தாசரி ஹரி ராவ் புகார் அளித்தார். இப்புகாரின்பேரில் காவல்நிலைய ஆய்வாளர் காளிராஜ் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து தீவிரமாக விசாரித்து வந்தனர்.

இதைத் தொடர்ந்து ஆவடி காவல் ஆணையரக ஆணையர் கி.சங்கர் உத்தரவின்பேரில், செங்குன்றம் துணை ஆணையர் பாலாஜி மேற்பார்வையில் உதவி ஆணையர்கள் பொன்னேரி சங்கர், எண்ணூர் வீரக்குமார், அம்பத்தூர் பிராங்க்ளின் ரூபன் டி ஆகியோர் தலைமையில் தனிப்படை போலீசார் சிசிடிவி காமிரா பதிவுகள் மற்றும் பலரிடம் விசாரணையை முடுக்கி, வெள்ளிக்கட்டி கடத்தல் தொடர்பான ஆசாமிகளை தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர்.

இவ்வழக்கு தொடர்பாக கடந்த 2 நாட்களுக்கு முன் மீஞ்சூர், கடப்பாக்கத்தைச் சேர்ந்த அதானி துறைமுக ஆபரேட்டர் நவீன்குமார் (25), மன்னார்குடியை சேர்ந்த அதானி துறைமுக லாரி டிரைவர் ஆகாஷ் (24), சென்னை ராயபுரத்தை சேர்ந்த கப்பல் மேற்பார்வையாளர் எபினாஸ் (46), திருவொற்றியூரை சேர்ந்த யார்டு மேற்பார்வையாளர் தேசிங்கு (55), பழவேற்காட்டை சேர்ந்த குணசீலன் (27), எர்ணாவூரை சேர்ந்த சந்தோஷ் (38), மீஞ்சூர் அருகே நந்தியம்பாக்கத்தை சேர்ந்த வெங்கடேஷ் (39), சென்னையை சேர்ந்த சண்முகவேல், கச்சி முகமது, முத்துராமன், அப்துல் கரீம், முனியாண்டி உள்பட 12 பேரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.

அவர்களிடம் இருந்து ரூ.9 கோடி மதிப்பிலான வெள்ளிக் கட்டிகள் பறிமுதல் செய்யப்பட்டன. பின்னர் நேற்று 12 பேரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். வெள்ளிக் கட்டி கடத்தலில் ஈடுபட்டவர்களை விரைவில் கண்டுபிடித்த துணை ஆணையர், 3 உதவி ஆணையர்கள், ஆய்வாளர் ஆகியோர் தலைமையிலான தனிப்படை போலீசாரை நேற்று மாலை ஆவடி காவல் ஆணையரக ஆணையர் கி.சங்கர் நேரில் வரவழைத்து பாராட்டி வெகுமதிகள் வழங்கினார்.

Advertisement