தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடிகைக்கு பணம் கொடுத்த விவகாரம் மாஜி அதிபர் டிரம்ப் மீதான 34 குற்றச்சாட்டுகள் நிரூபணம்: ஜூலை 11ம் தேதி தண்டனை அறிவிப்பு

வாஷிங்டன்: நடிகைக்கு பணம் கொடுத்தது தொடர்பான விவரங்களை முறைகேடாக மறைத்த குற்றச்சாட்டின் பேரில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப்புக்கு எதிராக 34 குற்றச்சாட்டு நிருபிக்கப்பட்டுள்ளது.கடந்த 2016ல் அமெரிக்காவில் நடந்த அதிபர் தேர்தலுக்கு முன்னர் தன்னைப் பற்றிய ரகசியங்களை மறைப்பதற்காக ஆபாச நடிகை ஸ்டோர்மி டேனியல்ஸூக்கு, அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்ப் 1.3 லட்சம் டாலர் (சுமார் ரூ.109 கோடி) அளித்ததாக குற்றம் சாட்டப்பட்டது.
Advertisement

இவ்விவகாரத்தில் டிரம்ப்புக்கு எதிராக நியூயார்க் நீதிமன்றத்தில் குற்றவியல் விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தப் பணப் பரிமாற்றத்தை மறைப்பதற்காக தனது நிறுவனக் கணக்குகளில் டிரம்ப் முறைகேடு செய்ததாக குற்றம்சாட்டப்படுகிறது. இந்த நிலையில், வழக்கின் பல கட்ட விசாரணைக்கு பின், டிரம்ப்புக்கு எதிராக 34 குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபராக இருந்த ஒருவர் மீது குற்றவியல் வழக்கில் தண்டனை பெறுவது வரலாற்றில் இதுவே முதல்முறை.

இதையடுத்து, இந்த வழக்கில் தண்டனை விபரங்கள் ஜூலை 11ம் தேதி நடைபெறும் வழக்கு விசாரணையின் போது வழங்கப்படும் என்று நியூயார்க் நீதிமன்றம் தெரிவித்துள்ளது. டிரம்புக்கு சிறை தண்டனை விதிக்கப்பட அதிக வாய்ப்புள்ளதாகக் கூறப்படும் நிலையில், நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து டிரம்ப் மேல்முறையீடு செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. குடியரசுக் கட்சியின் தேசிய மாநாடு ஜூலை 15ம் தேதி தொடங்க உள்ள நிலையில், ஜூலை 11ம் தேதி டிரம்ப் மீதான தண்டனை வெளியாக உள்ளதால், அமெரிக்க அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Advertisement