எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி நடிகை கஸ்தூரி கையெழுத்திட்டார்
Advertisement
இதையடுத்து அவர் புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்நிலையில் அவர், ஜாமீன் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தது. இதில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நடிகை கஸ்தூரி கடந்த 21ம் தேதி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். மறு உத்தரவு வரும் வரையில் தினமும் அவர் எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி நடிகை கஸ்தூரி நேற்று காலை 10 மணியளவில் தனது வக்கீலுடன் எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘கடந்த 4 நாட்களாக தமிழக மக்களை சந்திக்காமல் மிகவும் மிஸ் பண்ணினேன். தற்போது அனைவரையும் பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி’ என்று கூறினார்.
Advertisement