தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி நடிகை கஸ்தூரி கையெழுத்திட்டார்

சென்னை: நீதிமன்ற உத்தரவுப்படி நடிகை கஸ்தூரி எழும்பூர் காவல்நிலையத்தில் நேற்று ஆஜராகி கையெழுத்திட்டார். சென்னையில் இந்து மக்கள் கட்சி நடத்திய ஆர்ப்பாட்டத்தில், நடிகை கஸ்தூரி தெலுங்கு பெண்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்தார். இதனால் அவர் மீது புகார்கள் குவிந்தது. அதன்பேரில் எழும்பூர் மற்றும் மதுரை போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் நடிகை கஸ்தூரி தாக்கல் செய்த முன்ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இதையடுத்து நடிகை கஸ்தூரியை ஐதராபாத்தில் உள்ள அவரது வீட்டில் எழும்பூர் போலீசார் கடந்த 16ம் தேதி கைது செய்தனர். பின்னர் அவர் சென்னை அழைத்து வரப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட நிலையில் வரும் 29ம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க உத்தரவிடப்பட்டது.
Advertisement

இதையடுத்து அவர் புழல் மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.

இந்நிலையில் அவர், ஜாமீன் கேட்டு எழும்பூர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனு கடந்த 20ம் தேதி விசாரணைக்கு வந்தது. இதில் அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. இதை தொடர்ந்து நடிகை கஸ்தூரி கடந்த 21ம் தேதி புழல் சிறையில் இருந்து வெளியே வந்தார். மறு உத்தரவு வரும் வரையில் தினமும் அவர் எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட வேண்டும் என்று அவருக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கப்பட்டது. அதன்படி நடிகை கஸ்தூரி நேற்று காலை 10 மணியளவில் தனது வக்கீலுடன் எழும்பூர் காவல் நிலையத்தில் ஆஜராகி கையெழுத்திட்டு சென்றார். அப்போது அவர் நிருபர்களிடம் கூறுகையில், ‘கடந்த 4 நாட்களாக தமிழக மக்களை சந்திக்காமல் மிகவும் மிஸ் பண்ணினேன். தற்போது அனைவரையும் பார்ப்பதில் மட்டற்ற மகிழ்ச்சி’ என்று கூறினார்.

Advertisement

Related News