நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் ஈடி ரெய்டு
Advertisement
இதனையடுத்து 2021ம் ஆண்டு ஜூலையில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். பின்னர் ராஜ் குந்த்ரா ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜ்குந்த்ரா மீது மேலும் ஒரு பணமோசடி வழக்கு பதியப்பட்டது. அதன்படி ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா பெயரில் இருந்த ரூ.98 கோடி கிரிப்டோ கரன்சியை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.
இந்நிலையில் ஆபாச படம் எடுத்து பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் மும்பை மற்றும் உபி மாநிலத்தில் ராஜ்குந்த்ராவின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கியமான ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.
Advertisement