தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடிகை ஷில்பா ஷெட்டி கணவர் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் ஈடி ரெய்டு

Advertisement

மும்பை: ஆபாச படம் எடுத்து பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் நடிகை ஷில்பா ஷெட்டியின் கணவர் ராஜ் குந்த்ராவின் வீடு உள்ளிட்ட 15 இடங்களில் அமலாக்கத்துறையினர் அதிரடி சோதனை நடத்தினர். பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி. இவர் தமிழ், இந்தி உள்ளிட்ட பல்வேறு மொழிகளில் நடித்துள்ளார். இவரது கணவர் ராஜ் குந்த்ரா. தொழிலதிபரான இவர் கடந்த 2021ம் ஆண்டு ஆபாச படம் எடுத்து அதனை இணையதளம் மற்றும் தனியார் செயலி நிறுவனத்துக்கு விற்று பணமோசடி செய்ததாக புகார் எழுந்தது.

இதனையடுத்து 2021ம் ஆண்டு ஜூலையில் ராஜ் குந்த்ரா கைது செய்யப்பட்டார். பின்னர் ராஜ் குந்த்ரா ஜாமீனில் வெளியே வந்தார். இந்நிலையில் இந்த ஆண்டின் தொடக்கத்தில் ராஜ்குந்த்ரா மீது மேலும் ஒரு பணமோசடி வழக்கு பதியப்பட்டது. அதன்படி ஷில்பா ஷெட்டி மற்றும் ராஜ் குந்த்ரா பெயரில் இருந்த ரூ.98 கோடி கிரிப்டோ கரன்சியை அமலாக்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

இந்நிலையில் ஆபாச படம் எடுத்து பணமோசடியில் ஈடுபட்ட வழக்கில் மும்பை மற்றும் உபி மாநிலத்தில் ராஜ்குந்த்ராவின் வீடு உள்ளிட்ட அவருக்கு சொந்தமான 15 இடங்களில் அமலாக்கத்துறை அதிகாரிகள் நேற்று அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் பல முக்கியமான ஆவணங்கள் சிக்கியதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

Advertisement