தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடிகை வனிதா விஜயகுமார் நடிப்பில் வெளியான மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் இளையராஜா பெயர் நீக்கம்: ஐகோர்ட்டில் பட தயாரிப்பு நிறுவனம் தகவல்

சென்னை: நடிகை வனிதா விஜயகுமார் மற்றும் நடன இயக்குனர் ராபர்ட் நடிப்பில் உருவாகியுள்ள மிசஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படம் வெளியாகியுள்ளது. இந்த திரைப்படத்தில் இசையமைப்பாளர் இளைஞராஜா இசையமைத்து மைக்கேல் மதன காமராஜன் திரைப்படத்தில் இடம்பெற்ற ராத்திரி சிவ ராத்திரி பாடல் இடம்பெற்றுள்ளது. தான் இசையமைத்த பாடலை தன்னுடைய அனுமதியில்லாமல் மிஸஸ் அண்ட் மிஸ்டர் திரைப்படத்தில் பயன்படுத்தி இருப்பதாகவும், பாடலை மாற்றி அமைத்துள்ளதாகவும் இளைராஜா தரப்பில் உயர் நீதிமன்றத்தில் சிவில் வழக்கு தொடரப்பட்டது.
Advertisement

அவரது மனுவில், இது காப்புரிமை மீறிய செயல். உடனடியாக அந்த பாடலை திரைப்படத்தில் இருந்து நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு, நீதிபதி செந்தில் குமார் ராமமூர்த்தி முன்பு விசாரணைக்கு வந்தபோது இளையராஜா இசையமைத்த பாடலை பயன்படுத்துவதோடு அவரின் பெயரும் பயன்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டது. தயாரிப்பாளர் வனிதா விஜயகுமார் சார்பில் எக்கோ நிறுவனத்திடம் அனுமதி பெற்றுதான் அந்த பாடல் பயன்படுத்தப்பட்டுள்ளதால் காப்புரிமை மீறல் இல்லை என்று தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து இந்த மனு குறித்து தயாரிப்பாளர் வனிதா விஜயகுமார் பதிலளிக்குமாறு நீதிபதி உத்தரவிட்டிருந்தார். வழக்கு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, இளையராஜா தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் ஏ.சரவணன், படத்தில் இளையராஜா பெயரை பயன்படுத்த கூடாது என்று தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார்.

அப்போது வனிதா விஜயகுமார் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் தர், இளையராஜாவின் 4850 பாடலை சோனி மியூசிக் நிறுவனம் வாங்கியுள்ளது. அவர்களிடமிருந்து பாடலை வாங்கினோம். படத்தில் இளையராஜாவின் பெயர் பயன்படுத்தப்பட்டது நீக்கப்பட்டுள்ளது என்றார். வழக்கை விசாரித்து நீதிபதி, இந்த வழக்கில் சோனி மியூசிக் நிறுவனத்தையும் சேர்க்குமாறு உத்தரவிட்டு விசாரணையை ஆகஸ்ட் 18ம் தேதி தள்ளிவைத்தார்.

Advertisement

Related News