தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடிகை பலாத்கார வழக்கு: போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்க திலீப் முடிவு

 

Advertisement

திருவனந்தபுரம்: மலையாள நடிகை பலாத்கார வழக்கில் பிரபல நடிகர் திலீப் 8வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டிருந்தார். இந்த வழக்கில் இவர் சதித்திட்டம் தீட்டியதாக வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்தது. கடந்த 7 வருடங்களுக்கு மேலாக நடைபெற்று வந்த விசாரணையில் நேற்று முன்தினம் தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் இந்த வழக்கில் முதல் 6 பேர் குற்றவாளிகள் என்று எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது. நடிகர் திலீப் மீது பதிவு செய்யப்பட்டிருந்த சதித்திட்டம் தொடர்பான குற்றங்களை அரசுத் தரப்பால் நிரூபிக்க முடியவில்லை என்று கூறி நீதிமன்றம் அவரை விடுவித்தது.

தீர்ப்புக்குப் பின் திலீப் நிருபர்களிடம் கூறுகையில், இந்த வழக்கில் நான் சதித்திட்டத்தில் ஈடுபடவில்லை. ஆனால் சில கிரிமினல் போலீஸ் அதிகாரிகள் சேர்ந்துதான் எனக்கு எதிராக சதித்திட்டம் தீட்டினர் என்றார். இந்நிலையில் போலீஸ் அதிகாரிகளுக்கு எதிராக நடிகர் திலீப் சட்ட நடவடிக்கை மேற்கொள்ள தீர்மானித்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 12ம் தேதி தீர்ப்பு வெளியான பின்னர் அதில் தெரிவிக்கப்பட்டிருக்கும் விவரங்களின் அடிப்படையில் அவர் நீதிமன்றத்தை அணுக தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது.

திலீப் தன்னைத்தானே நியாயப்படுத்தி கொள்கிறார்: கேரள முதல்வர் பினராயி விஜயன் கண்ணூரில் நிருபர்களிடம் கூறியது: நடிகை பலாத்கார வழக்கில் விசாரணை அதிகாரிகள் தங்களுக்கு கிடைத்த ஆதாரங்களின் அடிப்படையில் தான் வழக்கை நடத்தினர். தீர்ப்பு குறித்த விவரங்கள் எதுவும் வெளியாகவில்லை. அவை வந்த பின்னர் மட்டுமே எதையும் கூற முடியும். தனக்கு எதிராக விசாரணை அதிகாரிகள் சதி செய்ததாக திலீப் கூறுகிறார். அதில் எந்த உண்மையும் கிடையாது. தன்னை நியாயப்படுத்துவதற்காகத் தான் அவர் இவ்வாறு கூறுகிறார். அரசுத் தரப்பு சார்பில் இந்த வழக்கில் சிறப்பாக வாதிடப்பட்டது என்றார்.

Advertisement