தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடிகை பலாத்கார வழக்கில் திலீப் விடுவிக்கப்பட்ட தீர்ப்பு விவரங்கள் முன்கூட்டியே வெளியானதாக புகார்: விசாரணை நடத்தக் கோரி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு கடிதம்

திருவனந்தபுரம்: நடிகை பலாத்கார வழக்கில் நடிகர் திலீப் விடுவிக்கப்பட்டது தொடர்பான தீர்ப்பு விவரங்கள் முன்கூட்டியே வெளியானதாக கூறி கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு வக்கீல்கள் சங்கம் சார்பில் கடிதம் அனுப்பப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பிரபல மலையாள நடிகை கடத்தி பாலியல் பலாத்காரம் செய்யப்பட்ட வழக்கில் 8 வருடங்களுக்குப் பின் கடந்த 8ம் தேதி தீர்ப்பு வழங்கப்பட்டது. இதில் ஏ 1 முதல் ஏ 6 வரை உள்ள 6 பேர் குற்றவாளிகள் என்று எர்ணாகுளம் நீதிமன்றம் தீர்ப்பளித்தது.

Advertisement

இவர்களுக்கான தண்டனை நாளை (12ம் தேதி) அறிவிக்கப்பட உள்ளது. இந்த வழக்கில் 8வது நபராக சேர்க்கப்பட்டிருந்த நடிகர் திலீப் உள்பட 4 பேர் விடுதலை செய்யப்பட்டனர். இந்நிலையில் இந்த தீர்ப்பு விவரங்கள் முன்கூட்டியே வெளியானதாக தற்போது புகார் எழுந்துள்ளது. இது தொடர்பாக கேரள உயர்நீதிமன்ற வக்கீல்கள் சங்கத் தலைவர் யஷ்வந்த் ஷெனாய் கேரள உயர்நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு ஒரு கடிதம் அனுப்பியுள்ளார்.

அதில் கூறியிருப்பது:

நடிகை பலாத்கார வழக்கில் தீர்ப்பு வருவதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு வக்கீல்கள் சங்கத்திற்கு ஒரு மொட்டை கடிதம் வந்தது. தற்போது வழங்கப்பட்டுள்ள தீர்ப்பு விவரங்கள் அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. திலீப் உள்பட 4 பேரும் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்படுவார்கள் என்று அதில் தெரிவிக்கப்பட்டிருந்தது. எனவே தீர்ப்பு விவரங்கள் முன்கூட்டியே வெளியானதாக சந்தேகம் உள்ளது. இதுகுறித்து உரிய விசாரணை நடத்தப்பட வேண்டும். இவ்வாறு அந்தக் கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

Advertisement