தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நடிகர் விஜய்யை பாஜ இயக்குகிறதா? முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி

சென்னை: நடிகர் விஜய்யை பாஜ இயக்குகிறதா என்பதற்கு முன்னாள் ஒன்றிய அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் பதில் அளித்தார். பாஜ முன்னாள் தலைவரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான பொன்.ராதாகிருஷ்ணன் தி.நகரில் உள்ள பாஜ தலைமை அலுவலகத்தில் நேற்று அளித்த பேட்டி: கரூரில் நடந்த துயர சம்பவத்தை அரசியலாக்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கின்றது. இதனை வன்மையாக கண்டிக்கிறேன். 27ம் தேதி அந்த இடத்தில் காவல்துறையினர் எப்படி அனுமதி கொடுத்தார்கள் என்பது மிகவும் ஆச்சரியமாக உள்ளது. 50 அடி அகலம் கொண்ட சாலையில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கூடும் நிகழ்ச்சிக்கு எப்படி அனுமதி அளிக்கப்பட்டது.

Advertisement

தவெக தலைவர் விஜய் தன்னுடைய கூட்டங்களுக்கு கர்ப்பிணி பெண்கள் வயதானவர்கள் சிறுவர்கள் எல்லாம் வர வேண்டாம் என்று ஏற்கனவே அறிக்கை கொடுத்து இருக்கிறார். அவர்களை எல்லாம் தடுத்திருக்க வேண்டிய பொறுப்பில் பலர் இருந்தாலும் அதில் முழு கவனம் செலுத்தி இருக்க வேண்டும். பொதுவாக ஒரு கட்சியின் நிகழ்ச்சி என்று சொன்னால் அந்தக் கட்சியைப் பற்றி அவர்கள் நடைமுறை பற்றி நன்கு தெரிந்த காவல்துறை அதிகாரிகள் முன்னெடுப்புகளை செய்வார்கள். அதன்படி கரூர் நிகழ்ச்சியில் காவல்துறை அதிகாரிகள் இருந்தார்களா என்பது மிகப்பெரிய கேள்வி.

நாமக்கல்லில் 40க்கும் மேற்பட்டவர்களை மருத்துவமனைக்கு கொண்டு சென்று இருக்கிறார்கள். அடுத்ததாக கரூரில் என்ன செய்ய வேண்டும் என்ற அறிவில்லையா? அதற்கான நடவடிக்கை எடுக்க வேண்டாமா?. விஜய் ஒரு புதிய கட்சியை ஆரம்பித்துள்ளார். நான் யாரையும் நியாயப்படுத்த வரவில்லை. எல்லா மக்களைப்போல அந்த கட்சி சேர்ந்தவர்களுக்கும் அச்சம் இருக்க வாய்ப்பு உண்டு. ஒருமுறை சென்றதற்கு இப்படி நடக்கிறது. மற்றொரு முறை செல்வதற்கு சிந்திப்பார்கள். இவ்வாறு அவர் கூறினர். பின்னர் விஜய்யை பாஜ இயக்குகிறது என்று எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்வது குறித்த கேள்விக்கு,‘‘உரிமை மறுக்கப்பட கூடியவர்கள், பேசுவதற்கு அஞ்சக்கூடியவர்கள் இந்த மண்ணில் வாழ்வதற்கு இடமில்லாமல் போய்விடுமோ என்று அஞ்சுபவர்கள் அத்தனை பேருக்கும் பாஜ துணையாக இருக்கும் என்பதில் எந்த சந்தேகமும் வேண்டாம்” என்றார்.

Advertisement

Related News