தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் சுவாமி தரிசனம்

 

Advertisement

திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயிலில் நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது குடும்பத்தினருடன் சுவாமி தரிசனம் செய்தார். நடிகர் ரஜினிகாந்த் நேற்று தனது 75வது பிறந்தநாளை கொண்டாடினார். இதனையொட்டி ரசிகர்கள், திரையுலகினர், அரசியல் தலைவர்கள் என பல்வேறு தரப்பினரும் நடிகர் ரஜினிகாந்திற்கு வாழ்த்துகளை சமூக வலைதளத்தில் தெரிவித்தனர். இந்நிலையில் திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய நடிகர் ரஜினிகாந்த் நேற்று திருமலைக்கு வந்தார். திருமலையில் உள்ள காயத்ரி ஓய்வறையில் தங்கிய அவர், இரவு கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடினர்.

இதனை தொடர்ந்து இன்று காலை ஏழுமலையான் கோயிலில் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், மகள்கள் ஐஸ்வர்யா, சவுந்தர்யா, பேரன்கள் யாத்ரா ராஜா, லிங்கா ராஜா, நடிகர் ரவிச்சந்திரன் மற்றும் குடும்பத்தினர் தரிசனம் செய்தனர். முன்னதாக கோயிலுக்குள் நடிகர் ரஜினிகாந்த், அவரது மனைவி லதா ரஜினிகாந்த், பேரன்கள் யாத்ரா, லிங்கா உள்பட 6 பேர், தங்கள் எடைக்கு நிகராக அரிசி, வெல்லம், நாணயங்களை காணிக்கையாக வழங்கினர். சுவாமி தரிசனம் செய்து விட்டு வெளியே வந்த ரஜினிகாந்தை, ரசிகர்கள், பக்தர்கள் செல்போனில் படம் எடுத்தனர். அப்போது அனைவருக்கும் கையசைத்துவிட்டு காரில் ஏறிச்சென்றார்.

 

Advertisement