தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

தனியார் நிறுவன உரிமையாளரிடம் பெற்ற ரூ.50 லட்சத்தை வட்டியுடன் தர வேண்டும்: நடிகர் யூகி சேதுவுக்கு சிவில் நீதிமன்றம் உத்தரவு

சென்னை: தனியார் நிறுவன உரிமையாளரிடம் வாங்கிய கடன் தொகை ரூ.50 லட்சத்தை வட்டியுடன் திருப்பி தர நடிகர் யூகி சேதுவுக்கு சென்னை சிட்டி சிவில் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ் சினிமாவில் இயக்குனர், எழுத்தாளர் என பல துறைகளில் தடம் பதித்த நடிகர் யூகி சேது என்ற சேதுராமன் தேனாம்பேட்டையை சேர்ந்த தனியார் நிறுவன உரிமையாளரான ஆர்.சுரேஷ்குமாரிடம் 2017ம் ஆண்டு 50 லட்சம் கடன் வாங்கினார். ஆனால், உத்தரவாத தேதியில் கடனை திரும்ப செலுத்தவில்லை.

இதையடுத்து, யூகி சேதுவுக்கு எதிராக, சென்னை 19வது கூடுதல் சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சுரேஷ்குமார் சார்பில், பொது அதிகாரம் பெற்ற அவரது மருமகன் அஸ்வனிகுமார் தலால் சிவில் வழக்கு தொடர்ந்தார். அதில், கடன் தொகை வங்கி வட்டியுடன் சேர்த்து 64 லட்சத்து 8,822 ரூபாயை 7 சதவீத வட்டியுடன் வழங்குமாறு யூகி சேதுவுக்கு உத்தரவிட வேண்டும் என்று கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதி பி.சுரேஷ்குமார் முன்பு விசாரணைக்கு வந்தது.

அப்போது, யூகி சேது தரப்பில், தன்னை துன்புறுத்தும் நோக்கில் போலியாக ஆவணங்களை உருவாக்கி வழக்கு தொடரப்பட்டுள்ளது. மனுதாரர் கூறியுள்ள ஆவணங்களில் உள்ள கையெழுத்து தன்னுடையதல்ல என்று தெரிவிக்கப்பட்டது. மனுதாரர் சார்பில் வழக்கறிஞர் சக்திவேல் ஆஜராகி, கடன் தொகையை பெறும்போதே, அதை எப்போது திருப்பி அளிப்பேன் என்ற விவரங்களை குறிப்பிட்டு, ஆவணங்களில் பிரதிவாதி கையெழுத்திட்டுள்ளார்.

அவர் பெற்ற கடனை வட்டியுடன் சேர்த்து செலுத்துமாறு உத்தரவிட வேண்டும் என்று வாதிட்டார். இரு தரப்பு வாதங்களை கேட்ட நீதிபதி, கடன் தொகையை திருப்பி செலுத்தும்படி மனுதாரரின் பொது அதிகாரம் பெற்ற அஸ்வனிகுமார் தலால் பலமுறை யூகி சேதுவிடம் கேட்டுள்ளார். மனுதாரர் தாக்கல் செய்த ஆவணங்களில் உள்ள கையெழுத்து, கடன் பெற்றவரின் கையெழுத்து என்பது உறுதியாகியுள்ளது. எனவே, யூகி சேது கடன் தொகை ரூ.50 லட்சத்தை 9 சதவீத வட்டியுடன் மனுதாரருக்கு திரும்ப செலுத்த வேண்டும் என்று உத்தரவிட்டார்.

Related News