தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை

ரேணுகாசாமி கொலை வழக்கில் கன்னட நடிகர் தர்ஷனுக்கு வழங்கிய ஜாமீன் ரத்து: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: ரேணுகாசாமியை கொலை செய்த வழக்கில் கன்னட நடிகர் தர்ஷன் கடந்தாண்டு ஜூன் மாதம் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். கர்நாடகா காவல்துறை தாக்கல் செய்துள்ள குற்றப்பத்திரிக்கையிலும் நடிகர் தர்ஷனின் பெயர் இடம் பெற்றிருந்த நிலையில் அறுவை சிகிச்சை செய்வதற்காக இடைக்கால ஜாமின் வழங்க வேண்டும் என கன்னட நடிகர் தர்ஷன், கர்நாடகா உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். இதையடுத்து, கடந்தாண்டு அக்டோபர் 30ம் தேதி இடைக்கால ஜாமீன் வழங்கி கர்நாடகா உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது. பின்னர் இடைக்கால ஜாமீன் டிசம்பர் 13ம் தேதி வழக்கமான ஜாமீனாக வழங்கப்பட்ட நிலையில், நடிகர் தர்ஷனுக்கு வழங்கப்பட்ட ஜாமீனை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் கர்நாடகா அரசு வழக்கு தொடர்ந்தது.

இந்த வழக்கின் விசாரணை கடந்த ஜனவரி மாதம் உச்ச நீதிமன்ற நீதிபதிகள் ஜே.பி.பார்திவாலா, ஆர்.மகாதேவன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது எதிர்மனுதாரர்கள் பதிலளிக்குமாறு நோட்டீஸ் பிறப்பித்த நீதிபதிகள், தர்ஷனுக்கு ஜாமீன் வழங்கப்பட்டதை மேற்கோள்காட்டி மற்றவர்களுக்கு ஜாமின் வழங்க கூடாது என்பதை தெளிவுபடுத்தி வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இவ்வழக்கின் விசாரணை இன்று மீண்டும் உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்போது, நடிகர் தர்ஷன் உள்ளிட்ட 5 பேருக்கு கர்நாடக உயர்நீதிமன்றம் வழங்கிய ஜாமீனை ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். முன்னதாக, குற்றம் சாட்டப்பட்டவர் சமூகத்தில் எவ்வளவு உயர்ந்தவராக இருந்தாலும் சட்டத்திற்கு முன்பு அவர் உயர்ந்தவர்கள் அல்ல என்றும் கூறினர்.

Related News