தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

இனிமேலாவது நடிகர் விஜய் பாடம் படிக்க வேண்டும்: முத்தரசன் வலியுறுத்தல்

திருவாரூர்: ஒரு கட்சியை எப்படி நடத்துவது, தொண்டர்களை எப்படி தயார் செய்வது என்று இனிமேலாவது விஜய் பாடம் படிக்க வேண்டும் என இந்திய கம்யூனிஸ்ட் முன்னாள் மாநில செயலாளரும், தேசிய கட்டுப்பாட்டு குழு உறுப்பினருமான முத்தரசன் கூறினார்.

Advertisement

திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி தெற்கு வீதியில் இந்திய கம்யூனிஸ் கட்சி சார்பில் பொதுக்கூட்டம் நடந்தது. இதில் முத்தரசன் பேசியதாவது:

நமது கட்சி கூட்டத்தில் யாராவது ஒருவர் கீழே விழுந்தா அப்படியே விட்டுவிடுமோ? உயிரை கொடுத்து காப்பாத்துவோம். நீ(விஜய்) பாட்டுக்கு துண்ட காணோம், துணியை காணோம் என்று ஓடி விட்டாய். உனக்கு கீழ் உள்ளவர்களும் ஓடிவிட்டனர். 3 நாட்கள் கழித்து அறிக்கை விடுகிறாய். என்ன நீ பெரிய கொம்பனா. உன்னை கைது பண்ண முடியாதா. ஒரு கட்சியை எப்படி நடத்துவது, தொண்டர்களை எப்படி தயார் செய்வது என்று இனிமேலாவது விஜய் பாடம் படிக்க வேண்டும். பார்க்கின்ற கூட்டமாக இல்லாமல் கேட்கிற கூட்டமாக மாற்ற வேண்டும். கேட்கிற கூட்டமாக இருந்தால் இந்த விபத்து நடந்திருக்காது, விபரீதம் நடக்காது.

எனக்காக மக்கள் காத்திருக்க வேண்டும் என்பது அகம்பாவம். தமிழ்நாட்டு மக்கள் என்ன உனக்கு அடிமையா? உனக்காக காத்திருப்பதற்கு. இந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி பாஜ வலை விரித்து விட்டது, விஜய் மாட்டிக்கிட்டார். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement

Related News