தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

கோயிலுக்கு சென்று திரும்பியபோது கார் விபத்தில் சிக்கிய நடிகர் விஜய் தேவரகொண்டா : நிச்சயதார்த்தம் முடிந்த நிலையில் பரபரப்பு

ஐதராபாத்: நடிகர் விஜய் தேவரகொண்டா சென்ற கார் விபத்தில் சிக்கிய நிலையில், அவர் அதிர்ஷ்டவசமாக காயமின்றி உயிர் தப்பினார். பிரபல தெலுங்கு நடிகர்களான விஜய் தேவரகொண்டாவுக்கும், ராஷ்மிகா மந்தனாவுக்கும் கடந்த 3ம் தேதி ரகசியமாக திருமண நிச்சயதார்த்தம் நடைபெற்றதாகக் கூறப்படுகிறது. இதையடுத்து, ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் உள்ள சத்ய சாயி பாபா ஆசிரமத்திற்கு விஜய் தேவரகொண்டா தனது குடும்பத்தினருடன் சென்று தரிசனம் செய்தார். தரிசனம் முடிந்து ஐதராபாத் திரும்பிக் கொண்டிருந்தபோது, அவர்களது கார் விபத்தில் சிக்கியது.

Advertisement

தெலங்கானா மாநிலம், ஜோகுலம்பா கட்வால் மாவட்டத்தில் உள்ள ஐதராபாத் - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் இந்த விபத்து நிகழ்ந்துள்ளது. விஜய் தேவரகொண்டா பயணம் செய்த சொகுசு காரின் பின்புறம், வேகமாக வந்த மற்றொரு கார் மோதிவிட்டு நிற்காமல் சென்றுவிட்டது. இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றாலும், கார் சேதமடைந்தது. விபத்தைத் தொடர்ந்து விஜய் தேவரகொண்டா பத்திரமாக ஐதராபாத் வந்தடைந்தார். இதுகுறித்து அவரது ஓட்டுநர் அளித்த புகாரின் பேரில், உள்ளூர் காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்து, மோதிவிட்டு நிற்காமல் சென்ற கார் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Advertisement

Related News