தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை மாற்று திறனாளிகள் என்று கருத அவசர சட்டம் இயற்றலாம் : ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் யோசனை!!

டெல்லி : ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டவர்களை மாற்று திறனாளிகள் என்று கருத அவசர சட்டம் இயற்றலாம் என்று ஒன்றிய அரசுக்கு உச்சநீதிமன்றம் ஆலோசனை வழங்கி உள்ளது. இது தொடர்பாக பதிலளிக்க நோட்டீஸ் அனுப்பியும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்காக குரல் கொடுத்து வரும் பெண் ஒருவர் இன்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு ஒன்றில் நேரில் ஆஜராகி வாதிட்டார். அப்போது வாயில் ஆசிட் ஊற்றி தாக்குதல் நடத்தப்பட்ட பெண்ணின் சார்பாக ஆஜராகி உள்ளதாக தெரிவித்தார். 2009ம் ஆண்டு ஆசிட் தாக்குதலுக்கு உள்ளான அந்த பெண், கடுமையாக பாதிக்கப்பட்டு இன்று குழாய் மூலம் உணவு உட்கொண்டு வருகிறார், வழக்கு இன்னும் முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

Advertisement

அப்போது தலைமை நீதிபதி அமர்வு, 2009ம் ஆண்டு வழக்கை இன்னும் முடிக்கவில்லையா, தலைநகர் டெல்லியிலேயே இந்த நிலைமையா, இது மிகவும் அவமானம் என்று நீதிபதிகள் தெரிவித்தனர். பின்னர், ஆசிட் வழக்குகள் நிலுவையில் உள்ளது குறித்து உச்சநீதிமன்றம் தாமாக முன்வந்து வழக்குப்பதிவு செய்யும் என்றும் தெரிவித்தனர். ஆசிட் தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களையும் மாற்றுத் திறனாளிகள் என்கிற வரம்பிற்குள் கொண்டு வரலாம், இதற்கு அவசர சட்டம் இயற்றலாம் என்று ஒன்றிய அரசின் சொலிசிட்டர் ஜெனரலிடம் எடுத்துரைத்தனர். இதற்கு பதில் அளிக்க ஒன்றிய அரசுக்கு நோட்டீஸ் அனுப்பி நீதிபதிகள் உத்தரவிட்டனர். பின்னர் உயர்நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ஆசிட் தாக்குதல் வழக்குகளின் விபரங்களை தெரிவிக்க நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement

Related News