தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

நான் முதல்வன் திட்டத்தில் சாதித்த மாணவர்கள் லண்டன் பயணம்

கோவை: தமிழ்நாடு அரசு மற்றும் பிரிட்டிஷ் கவுன்சில், பொறியியல் மாணவர்களுக்கு சர்வதேச உயர்கல்வி அளிக்க உதவித்தொகை திட்டத்தை துவங்கியது. இதற்கு 80 சதவீத மதிப்பெண் மற்றும் அதற்கு மேல் பெற்று இருக்க வேண்டும். இதற்கு நடப்பாண்டில் தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகத்தின் நான் முதல்வன் திட்டத்தின் மூலம் தமிழ்நாட்டை சேர்ந்த தகுதி வாய்ந்த 2 ஆயிரம் மாணவர்கள் விண்ணப்பித்திருந்தனர். இதில், 100 மாணவர்கள் முதல் சுற்றில் தேர்வு செய்யப்பட்டனர்.
Advertisement

இந்த திட்டத்தில் தேர்வு செய்யப்பட்ட மாணவர்கள் கடந்த மார்ச் 5 முதல் மார்ச் 16 வரை லண்டன் டர்ஹாம் பல்கலைக்கழகத்தால் நடத்தப்பட்ட 24 மணி நேர ஆன்லைன் பாடத்திட்டத்தை முடித்தனர். அவர்கள் இப்போது இங்கிலாந்தில் ஒரு வார நேருக்கு நேர் நிகழ்ச்சியில் பங்கு பெற உள்ளனர். கடுமையான தேர்வு செயல் முறைகளுக்கு பிறகு லண்டன் டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் நேரில் பயிற்சி அளிக்கும் திட்டத்திற்கு சிறந்த 15 பொறியியல் மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு உள்ளனர்.

இதில், அண்ணா பல்கலைக்கழக கோவை மண்டல வளாகத்திலிருந்து பிரதீஷ் மற்றும் ஸ்ருதி ஆகிய இரண்டு மாணவர்கள் தேர்வாகி உள்ளனர். இவர்கள் வரும் 9ம் தேதி முதல் 16ம் தேதி வரை லண்டனில் உள்ள டர்ஹாம் பல்கலைக்கழகத்தில் நேரடி பயிற்சி மேற்கொள்ள உள்ளனர்.

இந்த மாணவர்கள் சர்வதேச கல்வி மற்றும் திறன்களை இங்கிலாந்து உயர்கல்வி நிறுவனம் மூலம் பெற உள்ளனர். மாணவர்களின் பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகள் மற்றும் செலவினங்களை தமிழ்நாடு திறன் மேம்பாட்டு கழகம் ஏற்றுள்ளதாக கோவை அண்ணா பல்கலைக்கழக முதன்மையர் சரவணகுமார் மற்றும் நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன் ஆகியோர் தெரிவித்தனர்.

Advertisement

Related News