தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

சொத்து குவிப்பு வழக்கில் இருந்து அமைச்சர் பெரியகருப்பன் விடுதலை: சிவகங்கை நீதிமன்றம் தீர்ப்பு

சிவகங்கை: சொத்து குவிப்பு வழக்கில் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் மற்றும் குடும்பத்தினரை விடுதலை செய்து சிவகங்கை நீதிமன்றம் உத்தரவிட்டது. தமிழக அமைச்சரவையில் கடந்த 2006 முதல் 2011 வரை இந்து சமய அறநிலையத்துறை அமைச்சராக கே.ஆர்.பெரியகருப்பன் இருந்தார். இவர் அமைச்சராக பணியாற்றிய காலத்தில் வருமானத்திற்கு அதிகமாக ரூ.1.20 கோடி சொத்து சேர்த்ததாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், கடந்த 2012ம் ஆண்டு கே.ஆர்.பெரியகருப்பன், அவரது மனைவி பிரேமா, தாய் கருப்பாயி அம்மாள், மகன் கோகுலகிருஷ்ணன், மைத்துனர் செந்தில்வேல் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.

Advertisement

இந்த வழக்கு சிவகங்கை மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணையின் போது அமைச்சரின் தாய் கருப்பாயி அம்மாள் இறந்துவிட்டார். இந்த வழக்கில் விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதையொட்டி அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் நீதிமன்றத்தில் ஆஜராகினர். வழக்கை விசாரித்த நீதிபதி அறிவொளி, வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த குற்றச்சாட்டு நிரூபிக்கப்படாததால் அமைச்சர் கே.ஆர்.பெரியகருப்பன் உள்ளிட்ட நான்கு பேரையும் விடுதலை செய்து உத்தரவிட்டார்.

Advertisement

Related News