தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆவடி மாநகராட்சியில் சேதமான பேனர்களால் விபத்து ஏற்படும் அபாயம்

Advertisement

ஆவடி : ஆவடி மாநகராட்சியில் சேதமான நிலையில் உள்ள பேனர்களால விபத்து ஏற்படும் சூழல் உள்ளதால் பொதுமக்கள் அச்சத்தில் மூழ்கியுள்ளனர்.கோடை வெயில் கடந்த சில வாரங்களாக பொதுமக்களை வாட்டி வதைக்கிறது. அதனால் ஏற்படும் உஷ்ணத்தால் பொதுமக்கள் வெளியே செல்ல முடியாமல் அவதிப்படுகின்றனர். இரவு நேரங்களில் அனல் காற்று வீசுவதால், உறக்கமின்றி தவிக்கின்றனர்.

இந்நிலையில், நேற்று காலை ஆவடி பகுதியில் திடீரென்று பலத்த காற்றுடன் சாரல் மழை பெய்தது. சுமார் 1 மணி நேரத்திற்கும் மேலாக இடைவிடாது பெய்ததால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. பலத்த காற்றுடன் திடீர் மழை பெய்ததால் பல இடங்களில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. குறிப்பாக பட்டாபிராம், ஜெ.ஜெ நகர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 2 மணி நேரம் மின் தடை ஏற்பட்டது.

ஆவடி திருமலைராஜபுரத்தில் பலத்த சூறைக்காற்று வீசியதில் ராட்சத பேனர் ஒன்று கிழிந்து தொங்கியது. அந்த பேனர் சாலையில் பறந்து அருகில் உள்ள மின் வடத்தில் விழுந்தது. இதனால், அப்பகுதியில் ஒரு மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. அதிர்ஷ்டவசமாக அசம்பாவிதம் ஏதும் ஏற்படவில்லை. இதேபோல், ஆவடி மற்றும் பருத்திப்பட்டு செக் போஸ்ட்டிலும் ராட்சத பேனர் கிழிந்து பறந்தது.

ஆவடி வீட்டுவசதி வாரிய குடியிருப்பு சாலையில், விளம்பர தட்டிகள் சரிந்து கிடந்தன. ஆவடி பருத்திப்பட்டு, பஜனை கோவில் தெரு எதிரில், த.வெ.க. கட்சியினர் அமைத்திருந்த தண்ணீர் பந்தலில், கூரை காற்றில் அடித்துச் சென்றது.

இதுகுறித்து சமூக ஆர்வலர்கள் கூறுகையில், ஆவடி மாநகராட்சி நிர்வாகம் உயர்நீதிமன்ற உத்தரவு இருந்தும் இதற்கு அனுமதி அளித்தது ஏன்? பொதுமக்களின் உயிர் அவ்வளவு எளிதா? பட்டாபிராம் மேம்பாலம் முழுவதும் ஆங்காங்கே பெரிய கட்டிடங்களில் பதாகைகள் அபாயத்தை ஏற்படுத்தும் நிலையில் உள்ளன. அனைத்து பதாகைகளையும் உடனடியாக அப்புறப்படுத்த மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும். இதற்காக அனுமதி அளித்த அதிகாரிகள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனர்.

 

Advertisement

Related News