தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஒரு வழிச்சாலையில் அத்துமீறும் வாகன ஓட்டிகளால் விபத்து அபாயம்

திருப்பூர்: திருப்பூரில் ஒரு வழிச்சாலையில் அத்துமீறி செல்லும் வாகன ஓட்டிகளால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது. திருப்பூர் புதிய பேருந்து நிலையத்தில் இருந்து பழைய பேருந்து நிலையம் செல்லும் பி.என்.சாலை, மேட்டுபாளையம், மில்லர் ஸ்டாப் வழியாக புஷ்பா தியேட்டர் வரை ஒரு வழிச் சாலையாக (ஒன்வே) அமைக்கப்பட்டுள்ளது. இதேபோல், எதிர்த் திசையில் புஷ்பா தியேட்டர் பகுதியில் இருந்து வரும் வாகனங்கள் குமார் நகர், எஸ்.ஏ.பி, 60 அடி சாலை வழியாகவே பி.என்.சாலையில் வழியில் இணைய வேண்டும். ஆனால், வாகனப் போக்குவரத்து விதிகளை பெரும்பாலான தனியார் மினி லோடு வாகனங்கள், இரு சக்கர வாகனங்கள் கண்டுகொள்வதில்லை.

Advertisement

புதிய பேருந்து நிலையம் நோக்கி விரைந்து செல்வதற்காக, பல வாகனங்கள் மேட்டுப்பாளையம் வழியாக உள்ள ஒரு வழிச் சாலையில் அத்துமீறி எதிர் திசையில் ஓட்டிச் செல்கின்றனர். இதன் விளைவாக, குறிப்பாக காலை மற்றும் மாலை நேரங்களில் இச்சாலையில் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது.வாகன ஓட்டி ஒருவர் கூறுகையில், இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன் விபத்து அபாயமும் நீடிக்கிறது. இப்பிரச்னையில் காவல் துறை உடனடியாகத் தலையிட்டு கண்டிப்பான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

ஒரு வழி சாலையில் விதிகளை மீறும் வாகனங்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்தல், கூடுதலாக போக்குவரத்துக் காவலர்களை இப் பகுதியில் நிலையாக நியமித்தல் ஆங்காங்கே ஒரு வழிச்சாலை குறித்து எச்சரிக்கை போர்டுகள் வைப்பது போன்ற நடவடிக்கைகள் மூலமே இந்தப் பிரச்னையைத் தீர்க்க முடியும் என்றனர்.

Advertisement