தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

வடக்கிபாளையம் பிரிவு மேம்பாலத்தில் சிதறி கிடக்கும் ஜல்லி கற்களால் விபத்து அபாயம்

*சீர்படுத்த கோரிக்கை

Advertisement

பொள்ளாச்சி : பொள்ளாச்சி-கோவை ரோட்டிலிருந்து பிரிந்து செல்லும் வடக்கிபாளையம் ரோட்டில் ரயில்வே மேம்பாலம் அமைக்கப்பட்டது. ஆர்.பொன்னாபுரம், சி.கோபாலபுரம்,வடக்கிபாளையம், சூலக்கல்,நடுப்புணி,புரவிபாளையம் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களுக்கு செல்லும் முக்கிய வழியாக உள்ளது. இதனால் மேம்பாலம் வழியாக, பகல் மற்றும் இரவு நேரத்தில் வாகன போக்குவரத்து உள்ளது.

தென்மேற்கு பருவமழை வலுத்த போது, மேம்பாலத்தின் சில இடங்களில் தார் ரோடு பெயர்ந்து பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து, அப்பகுதிகள் அண்மையில் செப்பனிடப்பட்டது.

இந்நிலையில், கடந்த சில நாட்களாக, ரயில்வே மேம்பாலத்தில் வாகனங்கள் திரும்பும் பகுதியில் ஜல்லிக்கற்கள் பரவலாக சிதறி கிடக்கிறது.இதனால், அந்த வழியாக வரும் இருசக்கர வாகன ஓட்டிகள் அவதிப்படுகின்றனர்.

அதிலும், சிலநேரத்தில் இருசக்கர வாகன ஓட்டிகள் சறுக்கி கீழே விழுகின்றனர். இந்த மேம்பாலத்தில் மின்விளக்கு இல்லாததால்,இரவு நேரத்தில் வெளிச்சமின்றி இருள்சூழ்ந்த பகுதியாக உள்ளது.இதனால், இரவு நேரத்தில் வேகமாக செல்லும் இருசக்கர வாகனங்கள் கட்டுப்பாட்டை இழந்து விழுந்து விபத்துக்கள் அதிகமாக வாய்ப்புள்ளது.

எனவே, ரயில்வே மேம்பாலத்தில் விபத்து நேரிடும் அளவிற்கு பறந்து கிடக்கும் ஜல்லிகற்களை அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என தன்னார்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement