தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

தந்தையுடன் சென்றபோது விபரீதம் பள்ளத்தில் ஆட்டோ கவிழ்ந்து 10 வயது சிறுமி பரிதாப சாவு

*திருச்சி அருகே சோகம்

Advertisement

சமயபுரம் : மண்ணச்சநல்லூர் அருகே தில்லாம்பட்டி கிராமத்தில் உள்ள தெற்கு தெரு பகுதியை சேர்ந்த ராஜ்குமார் (35). கார் டிரைவர். இவரது மனைவி சரண்யா. இவர்களுக்கு கிரேசிக்கா(10) என்ற மகளும், ராம் என்ற மகனும் உள்ளனர்.இந்நிலையில் கடந்த 12ம் தேதி ராஜ்குமார் செகனட்டில் பேசஞ்சர் ஆட்டோவை வாங்கினார். அன்றிரவு ஆட்டோவுடன் வீட்டிற்கு வந்த ராஜ்குமார் தனது குழந்தைகளை ஆட்டோவில் ஏற்றிக்கொண்டு ரவுண்டு அடித்தார்.

அப்போது கனமழை பெய்ந்ததால் ஆட்டோ தில்லாம்பட்டி பகுதியில் உள்ள வெள்ளகுளம் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதையடுத்து ராஜ்குமார் அபய குரல் எழுப்பியதில் அவ்வழியே வந்த நபர்கள் மூவரையும் மீட்டனர்.இதில் சிறுமி கிரேசிக்கா ஆட்டோவின் அடியில் சிக்கிக்கொண்டார். ராஜ்குமார் ஆட்டோவில் உள்ள கம்பி இடுக்கில் கை மாற்றிக்கொண்டு எலும்பு முறிவு ஏற்பட்டது.

இதில் அதிர்ஷ்டவசமாக ராஜ்குமார், மகன் ராம் எவ்வித காயமும் இன்றி உயிர் தப்பினர். மேலும் மயங்கி கிடந்த கிரேசிக்காவை மீட்டு மண்ணச்சநல்லூர் அரசு மருத்துவமனையிக்கு கொண்டு சென்றனர். அப்போது பரிசோதனை செய்த மருத்துவர் சிறுமி ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த மண்ணச்சநல்லூர் போலீசார் சிறுமி கிரேசிக்காவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீரங்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பின்னர் இச்சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்து தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.புதிய ஆட்டோவில் குழந்தைகளை ஏற்றிக்கொண்டு ரவுண்டு அடித்தப்போது ஏற்பட்ட விபத்தில் சிறுமி இறந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் சோ கத்தை ஏற்படுத்தியுள்ளது.

Advertisement