தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆனைவாரி ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால் விபத்து அபாயம்

Advertisement

*நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை

திருவெண்ணெய்நல்லூர் : திருவெண்ணெய்நல்லூர் அருகே ஆனைவாரி ரயில்வே மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியாததால் விபத்துகள் ஏற்படும் அபாய நிலை ஏற்பட்டுள்ளது. இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம், திருவெண்ணெய்நல்லூர் அருகே கடலூர்-சித்தூர் சாலையில் ஆனைவாரி கிராமத்தில் ரயில்வே மேம்பாலம் உள்ளது. இந்த மேம்பாலத்தில் கடந்த சில நாட்களாக மின்விளக்குகள் எரியாமல் இருள் சூழ்ந்து விபத்துகள் ஏற்படும் அபாய நிலை இருந்து வருகிறது.

மேலும் கடலூர், விழுப்புரம், உளுந்தூர்பேட்டை, பண்ருட்டி, திருவண்ணாமலை, வேலூர், சித்தூர், பெங்களூரு உள்ளிட்ட முக்கிய நகரங்களுக்கு செல்லக்கூடிய ஏராளமான வாகனங்கள் இந்த மேம்பாலத்தின் வழியேதான் செல்ல வேண்டும். இந்நிலையில் இந்த மேம்பாலத்தில் மின்விளக்குகள் எரியாமல் உள்ளதால் வாகன ஓட்டிகள் மிகவும் சிரமத்துக்கு உள்ளாகி அச்சத்துடனேயே சென்று வருகின்றனர்.

இதனால் அப்பகுதியில் பெரிய அளவில் விபத்துகள் ஏற்படுவதற்கு முன் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வாகன ஓட்டிகள், பொதுமக்கள் மற்றும் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Advertisement