தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆவணி திருவிழா கோட்டார் ஏழகரம் பெருமாள் கோயில் தேரோட்டம் திரளான பக்தர்கள் பங்கேற்பு

நாகர்கோவில்: கோட்டார் ஏழகரம் பெருமாள் கோயில் ஆவணி திருவிழாவையொட்டி இன்று காலை தேரோட்டம் நடந்தது. இந்த நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Advertisement

கோட்டார் ஏழகரத்தில் பிரசித்தி பெற்ற பொன்பொருந்தி நின்றருளிய பெருமாள் கோயில் உள்ளது. இந்த கோயில் ஆவணி திருவிழா கடந்த 27ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. திருவிழாவையொட்டி அலங்கார தீபாராதனை, சுவாமி திருவீதி உலா உள்பட பல்வேறு நிகழ்ச்சிகள் நடந்தது. முக்கிய நிகழ்ச்சியான தேரோட்டம் இன்று நடந்தது.

இன்று காலை சுமார் 8.30 மணி அளவில் திருத்தேர் வடம் தொட்டு இழுத்தல் நிகழ்ச்சி நடந்தது. சிறப்பு விருந்தினர்களாக மாநகராட்சி மேயர் மகேஷ், தமிழ்நாடு மாநில உணவு ஆணையத்தலைவர் சுரேஷ்ராஜன், கவுன்சிலர் சுப்பிரமணியன், முன்னாள் கவுன்சிலர் செல்வம், திமுக வட்ட செயலாளர் முருகன், கோயில் கண்காணிப்பாளர் ஆனந்த், சரவணன் மற்றும் விழாகுழுவினர் பக்தர்கள் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.

தேரோட்ட நிகழ்ச்சியில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டனர்.

மதியம் 12 மணிக்கு அலங்கார தீபாரதனை நடந்தது. மாலை 6.30 மணிக்கு அலங்கார தீபாராதனை, இரவு 8.30 மணிக்க சுவாமி எழுந்தருளல் நிகழ்ச்சி ஆகியவை நடக்கிறது. நாளை (5ம் தேதி) 10ம் திருவிழா நடக்கிறது. நாளை காலை 10 மணிக்கு சிறப்பு பூஜை, 10.30 மணிக்கு அன்னதானம் ஆகியவை நடக்கிறது. மாலை 5.30 மணிக்கு கோயிலில் இருந்து சுவாமி ஆராட்டுக்கு எழுந்தருளல் நடக்கிறது. ஒழுகினசேரி ஆராட்டுத்துறையில் சுவாமிக்கு ஆராட்டு நடக்கிறது. இரவு 12 மணிக்கு வான வேடிக்கை நடக்கிறது.

Advertisement