தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் சிறப்பு வழி தரிசன கட்டணம் ரூ.100 ஆக குறைப்பு: அமைச்சர் சேகர்பாபு தகவல்

திருவள்ளூர் : ஆடிக்கிருத்திகையை முன்னிட்டு திருத்தணி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ரூ.200 /- சிறப்பு வழி தரிசன கட்டணம் ரூ.100/- ஆக குறைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சேகர்பாபு தகவல் தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், முதலமைச்சர்.மு.க.ஸ்டாலின் உத்தரவின்படி, திருவள்ளூர் மாவட்டம், திருத்தணி, சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா ஆகிய இரண்டு திருவிழாக்களுக்கு சுவாமி தரிசனம் செய்திட சிறப்பு வழி தரிசன கட்டணம் ரூ.200லிருந்து ரூ.100ஆக குறைக்கப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.
Advertisement

அறுபடை வீடுகளில் ஐந்தாம் படைவீடு என்று போற்றப்படும் திருத்தணி சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் ஆடிக்கிருத்திகை திருவிழா, டிசம்பர் 31 மற்றும் ஜனவரி 1 தேதிகளில் நடைபெறும். திருப்படி திருவிழாவிற்கு தமிழ்நாடு மற்றும் அண்டை மாநிலங்களிலிருந்து இலட்சக்கணக்கான பக்தர்கள் வருகைதந்து சுவாமி தரிசனம் செய்கின்றனர். இந்தாண்டு ஆடிக்கிருத்திகை திருவிழா 27.07.2024 முதல் 31.07.2024 வரை 5 நாட்கள் நடைபெற உள்ளது. இத்திருவிழாவிற்கான முன்னேற்பாடு பணிகள் குறித்து கைத்தறி மற்றும் துணிநூல்துறை அமைச்சர் .ஆர்.காந்தி மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர். சேகர்பாபு ஆகியோர் தலைமையில் 23. 07.2024 அன்று ஒருங்கிணைப்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்தில் பொதுமக்கள் சார்பில் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படித் திருவிழா ஆகிய இரண்டு திருவிழாக்களின்போது சிறப்பு வழி தரிசனக் கட்டணம் ரூ.200ஐ குறைத்திட வேண்டும் என வைக்கப்பட்ட கோரிக்கையின் அடிப்படையில் திருக்கோயில் அறங்காவலர் குழு தீர்மானத்தின்படி கட்டணத்தை மாற்றி அமைத்திட திருக்கோயில் நிர்வாகம் சார்பில் அரசின் அனுமதி கோரப்பட்டிருந்தது. முதலமைச்சர் உத்தரவின்படி, திருத்தணியில் நடைபெறும் ஆடிக்கிருத்திகை மற்றும் திருப்படி திருவிழா நாட்களில் சிறப்பு வழி நுழைவுக் கட்டணம் ரூ. 200/- ஐ குறைத்து ரூ.100/- ஐ நடைமுறைப்படுத்திட ஆணையிடப்பட்டுள்ளது என இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர்.சேகர்பாபு தெரிவித்துள்ளார்.

Advertisement