தலையங்கம்அரசியல்இந்தியாதமிழகம்குற்றம்
ஆன்மிகம் | விசேஷங்கள்வழிபாடு முறைகள்மந்திரங்கள்பொங்கல்பிரசாதம்பரிகாரங்கள்நம்மஊருசாமிகள்சிறப்புதொகுப்புகதைகள்ஆன்மீகம் தெரியுமா?ஆன்மீகஅர்த்தங்கள்ஆன்மீக செய்திகள்ஆன்மீக சிந்தனைஆன்மீக கட்டுரைகள்ஆலய தரிசனம்அபூர்வ தகவல்கள்
மருத்துவம் | யோகாமூலிகை மருத்துவம்மகப்பேறு மருத்துவம்டயட்குழந்தை வளர்ப்புஉடல்நலம் உங்கள் கையில்இயற்கை மருத்துவம்இயற்கை உணவுஆலோசனைஆரோக்கியவாழ்விற்குகீரைகள்ஆரோக்கிய வாழ்வுஅந்தரங்கம்
மகளிர் | வீட்டிலிருந்தே சம்பாதிக்கநேர்காணல்சிறப்பு கட்டுரைகள்காதோடுதான் பேசுவேன்கலைகள்ஃபேஷன்இல்லம்அழகு
வேலைவாய்ப்பு
சமையல் | ருசியான குழம்பு வகைகள்பொறியல்வகைகள்பண்டிகை பலகாரம்சைவம்செட்டிநாட்டுச் சமையல்சூப்வகைகள்கோடைக்கால ஸ்பெஷல்கிராமத்து விருந்துகார வகைகள்ஐஸ்கிரீம்வகைகள்இனிப்பு வகைகள்அசைவம்
மாவட்டம் | வேலூர்விழுப்புரம்விருதுநகர்ராமநாதபுரம்மதுரைபெரம்பலூர்புதுக்கோட்டைநீலகிரிநாமக்கல்நாகப்பட்டினம்தேனிதூத்துக்குடிதிருவாரூர்திருவள்ளூர்திருவண்ணாமலைதிருப்பூர்திருநெல்வேலிதிருச்சிதிண்டுக்கல்தர்மபுரிதஞ்சாவூர்சேலம்சென்னைசிவகங்கைகோயம்புத்தூர்கிருஷ்ணகிரிகாஞ்சிபுரம்கன்னியாகுமரிகரூர்கடலூர்ஈரோடுஅரியலூர்
சிறப்பு பகுதி | கல்விதொழிற்நுட்பம்மகளிர்மலர்வண்ணத்திரை
Advertisement

ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி சதுரகிரி கோயிலுக்கு செல்ல 5 நாட்கள் அனுமதி

வத்திராயிருப்பு: ஆடி அமாவாசை திருவிழாவையொட்டி, சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் பக்தர்கள் தரிசனம் செய்ய ஆக.1ம் தேதி முதல் 5ம் தேதி வரை 5 நாட்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. மதுரை மாவட்டம், சாப்டூர் அருகே, மேற்கு தொடர்ச்சி மலையில் பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில் உள்ளது. இக்கோயிலுக்கு சாப்டூர் வழியாகவும், விருதுநகர் மாவட்டம், வத்திராயிருப்பு வழியாக தாணிப்பாறை சென்று, அங்கிருந்து மலைப்பாதை வழியாகவும் கோயிலுக்குச் செல்லலாம். 90 சதவீத பக்தர்கள் தாணிப்பாறை வழியாகத்தான் கோயிலுக்கு சென்று வருகின்றனர்.
Advertisement

கடல் மட்டத்திலிருந்து 4,500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயிலில் தற்போதும் சித்தர்கள் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது. மேலும், இப்பகுதி சித்தர்களின் சொர்க்கபூமி என அழைக்கப்படுகிறது. இதனால், முக்கிய விஷேச நாட்களில் விருதுநகர் மாவட்டம் மட்டுமல்லாமல், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த பக்தர்கள் குவிந்து சாமி தரிசனம் செய்வர். கோயிலில் மாதந்தோறும் அமாவாசை, பவுர்ணமிக்கு தலா 3 நாட்களும், பிரதோஷத்திற்கு 2 நாட்கள் என மொத்தம் 8 நாள் பக்தர்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகின்றனர்.

முக்கிய திருவிழாவாக ஆடி அமாவாசை திருவிழா கொண்டாடப்படுகிறது. இந்தாண்டு ஆடி அமாவாசை திருவிழா வரும் ஆக.4ம் தேதி நடைபெற உள்ளது. இதையொட்டி ஆக.1 முதல் 5ம் தேதி வரை 5 நாட்கள் பக்தர்கள் தரிசனம் செய்ய கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை நிர்வாகம் அனுமதி அளித்துள்ளது. ஆக.1ல் பிரதோஷம், 2ம் தேதி சிவராத்திரி, 3ம் தேதி ஆடி 18ம் பெருக்கு, 4ம் தேதி ஆடி அமாவாசை என வரிசையாக விஷேச நாட்கள் வருகின்றன. இதனால், இந்தாண்டு பக்தர்கள் அதிகளவில் கூடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆடி அமாவாசை திருவிழாவுக்கான ஏற்பாடுகளை கோயில் நிர்வாகம் செய்து வருகிறது.

Advertisement

Related News